'ஒரு தடவை என்னை விஜயகாந்தை பார்க்க விட்டுருங்க': மேடையில் உருகிப் பேசிய ராதாரவி

பெரும்பாலும் ஆக்ஷன் படங்களில் நடித்துள்ள விஜயகாந்த் குறும்பத்தனத்தில் மன்னன் என்று திரை வட்டாரத்தில் ஒரு பேச்சு இருக்கிறது.

பெரும்பாலும் ஆக்ஷன் படங்களில் நடித்துள்ள விஜயகாந்த் குறும்பத்தனத்தில் மன்னன் என்று திரை வட்டாரத்தில் ஒரு பேச்சு இருக்கிறது.

author-image
WebDesk
New Update
'ஒரு தடவை என்னை விஜயகாந்தை பார்க்க விட்டுருங்க': மேடையில் உருகிப் பேசிய ராதாரவி

என் நண்பன் விஜயகாந்தை ஒருமுறை பார்க்க விடுங்கள் என்று நடிகர் ராதாரவி உருகி பேசிய வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் திரையுலகில் தனது நடிப்பு, சக நடிகர்கள் மீதான மரியாதை நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்கான முயற்சி உள்ளிட்ட ஏராளமான செயல்கள் மூலம் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சக நடிகர்கள் மத்தியிலும் புகழின் உச்சத்தில் இருப்பவர் விஜயகாந்த்.

சினிமாவில் தான் உச்ச நட்சத்திரம் என்றாலும் கூட, அதை பெரியதாக காட்டிக்கொள்ளாமல், சக நடிகர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முதல் ஆளாக சென்று உதவி செய்பவர். மேலும் இந்தியாவில் எந்த மூலையில் பிரச்சினை என்றாலும் அதற்கு முதல் நன்கொடை கொடுப்பது விஜயகாந்த் தான் என்று நடிகர் சத்யராஜ் ஒரு மேடை பேச்சில் தெரிவித்திருந்தார்.

பெரும்பாலும் ஆக்ஷன் படங்களில் நடித்துள்ள விஜயகாந்த் குறும்பத்தனத்தில் மன்னன் என்று திரை வட்டாரத்தில் ஒரு பேச்சு இருக்கிறது. இதை அவர் நடித்த காமெடி காட்சிகளின் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம். அதேபோல் சினிமாவில் ராதாரவி, தியாகு, வாகை சந்திரசேகர் உள்ளிட்ட சிலருடன் விஜயகாந்த் நெருங்கிய நட்பு பாராட்டியுள்ளார்.

Advertisment
Advertisements

தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், அரசியல் மட்டும் சினிமாவில் இருந்து ஒய்வில் இருந்து வரும் விஜயகாந்த், முக்கியமான நாட்களில் மட்டும் தனது தொண்டர்களை சந்தித்து வருகிறார். ஆனால் சக நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என யாரையும் விஜயகாந்தை சந்திக்க அவரது குடும்பத்தினர் சந்திக்க அனுமதிப்பதில்லை.

இதனிடையே சமீபத்தில் மேடையில் பேசிய நடிகரு ராதாரவி, நான் விஜயகாந்த் எல்லாம் நெருங்கிய நண்பர்கள். நான் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற முக்கிய காரணமே விஜயகாந்த்தான். ஆனால் இப்போது எல்லாம் மாறிவிட்டது. விஜயகாந்தை முன்புபோல் எங்களால் சந்திக்க முடியவில்லை. அவர் உடல் நிலை சரியில்லை என்பது தெரியும் இருந்தாலும் அவரை சந்திக்க ஒரே ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்.

எங்களது நட்பு எப்படிப்பட்டது என்பது உங்களுக்கு தெரியாது. அதனால் சுதீஷ் (விஜயகாந்த் மைத்துனர்) தயவு செய்து ஒருமுறை விஜயகாந்தை சந்திக்க விடுங்கள். தூரத்தில் இருந்து அவரை சந்திக்க விட்டாலும்போது இதுதான் விஜயகாந்த் என்று காட்டுங்கள் நான் தூரத்தில் இருந்து பார்த்தக்கொள்கிறேன் என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Radharavi Vijayakanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: