Advertisment

அப்பாவின் கடைசி ஆசை : அந்த படத்தை எடுக்க உள்ளேன்; விஜயகாந்த் மகன் உருக்கம்

அப்பா நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட படத்தை எடுக்க உள்ளதாக விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Vijayakanth With Sons

மகன்களுடன் விஜயகாந்த்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜயகாந்த் ஆசைப்பட்ட ஒரு படத்தை தற்போது தான் தயாரிக்க நினைப்பதாகவும், காலமும் நேரமும் அதற்கு கைகொடுக்கும் என நம்புவதாகவும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் உருக்கமான தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். நடிகராக மட்டுமல்லாமல், சக மனிதனாக தன்னால் முடிந்தவரை அனைவருக்கும் உதவிகள் செய்து வந்த விஜயகாந்த், சினிமா யூனிட்டில் அனைவருக்கும் சமமான சாப்பாடு வழங்க வேண்டும் என்று கூறியதுடன் அதனை செயல்படுத்தியும் காட்டினார். மேலும் நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு கைகொடுத்து உதவியவர் விஜயகாந்த்.

மேலும் நடிகர் சங்க கடனை அடைத்து, கட்டிட்டம் கட்டுவதற்காக முயற்சி செய்த விஜயகாந்த், தான் தலைவராக இருந்தபோது சக நடிகர்களின் பிரச்சனை மட்டுமல்லாமல், இலங்கை தமிழர் பிரச்சனை, காவிரி பிரச்சனை என பல பிரச்சனைகளுக்கு நடிகர் சங்கத்தின் சார்பில் குரல் கொடுத்திருந்தார். அதேபோல் அரசியலிலும் குறுகிய காலத்தில் எதிர்கட்சி தலைவராக உயர்ந்த விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

உடல்நல பாதிப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், சமீபத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் மரணமடைந்தார். அவரது மரணம் திரைத்துறையில் மட்டுமல்லாமல், தமிழகத்தில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியது. விஜயகாந்த் இறந்தபின் அவரது நினைவாக ஒருசிலர் ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு வழங்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே விஜயகாந்த் மறைந்த சில நாட்களிலேயே அவரை வைத்து ஊமை விழிகள் என்ற படத்தை தயாரித்த ஆபாவாணன், அந்த படத்தின் 2-ம் பாகத்தை தயாரிக்க உள்ளதாகவும், இந்த படத்தில் ஏ.ஐ டெக்னாலஜி மூலம் விஜயகாந்த் நடிக்க வைக்க உள்ளதாகவும் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது விஜய் நடித்து வரும் கோட் படத்திலுமத் விஜயகாந்த் ஏ.ஐ. டெக்னாலஜி உதவியுடன் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் தற்போது நடித்து வரும் படைத்தலைவன் படத்திலும் விஜயகாந்த் ஏ.ஐ. டெக்னாலஜி உதவியுடன் நடித்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படங்கள் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இதனிடையே விஜயகாந்த் மூத்த மகன் விஜயபிரபாகரன் வெளியிட்டுள்ள உருக்கமான அறிவிப்பில், ஜெட்லீ நடிப்பில் வெளியான சீனப்படமான ''மை ஃபாதர் ஈஸ் ஏ ஹீரோ'' என்ற படம் அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும். இந்த படத்தில் நானும் அவரும் நடிக்க வேண்டும் என்று அப்பா விரும்பினார். ஆனால் அது கடைசிவரை நடக்காமலே போய்விட்டது. அப்பாவின் ஆசையை நிறைவேற்ற அந்த படத்தை எடுக்க முடிவு செய்துள்ளேன். காலமும் நேரமும் எப்படி கை கொடுக்கிறது என்று பார்ப்போம் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் வெளியிட்டுள்ள உருக்கமான இந்த அறிவிப்பு விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அப்பாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijayakanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment