தமிழ் சினிமாவில் பல அறிமுக இயக்குனர்கள், திரைப்பட கல்லூரி மாணவர்கள் சினிமாவில் இயக்குனராக மாறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவிஜயகாந், ஒரு படத்தில் நடிப்பதற்காக, அப்போது வாங்கிய சம்பளத்தை விடவும், 3 மடங்கு சம்பளம் கேட்க, அதையும் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு அந்த படத்தை தயாரித்துள்ளார் பிரபல இயக்குனர்.
Advertisment
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்தவர் விஜயகாந்த். சினிமா பின்புலம் இல்லை என்றாலும், தனது தொடர் முயற்சிகளின் மூலம் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்த இவர், எம்..ஜி.ஆர் பாணியில்,சினிமாவில் அனைவருக்கும் சமமான உணவு என்ற வழக்கத்தை கொண்டு வந்தவர்.
அதேபோல் அறிமுக இயக்குனர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்த தமிழ் சினிமா நடிகர் என்ற அடையாளம் பெற்றிருக்கும் விஜயகாந்த், நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு, கால்ஷீட் கொடுத்து அவர்களை முன்னேற்றத்திற்கு கொண்டு வரும் வேலைகளையும் செய்துள்ளார். இன்றைய நடிகர்களில் தமிழ் தவிர வேற்று மொழி படங்களில் நடிக்காத ஒரே நடிகர் விஜயகாந்த் தான். அதேபோல் திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுக்க முக்கிய காரணமாக இருப்பவர் விஜயகாந்த்.
தற்போது அவர் இல்லை என்றாலும், அவரை பற்றி சினிமா பிரபலங்கள் பல தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பிரபுதேவா ஒரு பேட்டியில் கூறியதை பிரபல பத்திரிக்கையாளரும், சினிமா தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முக திறமை கொண்ட சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார். விஜயகாந்த் நடித்த பல திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றிய பிரபுதேவா, வானத்தைபோல திரைப்படத்தில் அவரின் தம்பியாகவும் நடித்திருந்தார்.
Advertisment
Advertisements
இதனிடையே பரதன் திரைப்படத்தில் புன்னகையிலே மின்சாரம் என்ற பாடலுக்கு, விஜயகாந்த் நடனமாட அந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். 11 நாட்கள் படமாக்கப்பட்ட இந்த பாடலுக்காக, பல கஷ்டமான நடன அசைவுகளை பிரபுதேவா, விஜயகாந்துக்கு சொல்லிக்கொடுக்க, அதை அப்படியே மறுப்பு சொல்லாமல் விஜயகாந்த் ஆடியுள்ளார். மேலும் ஆடி முடித்தவுடன், பிரபு ஓகே தானே என்றும் கேட்டுள்ளதார். சரியில்லை இன்னொரு முறை எடுக்கலாம் என்று சொன்னாலும் விஜயகாந்த் சளைக்காமல் அதற்கும் சம்மதம் சொல்வாரம்.
அப்போது சின்ன பையனாக இருந்தாலும் பிரபுதேவாவுக்கு மாஸ்டருக்கான மரியாதை கொடுத்த விஜயகாந்த், ராஜதுரை படத்தில் ராதா ஏ ராதா என்று தொடங்கும் அந்த பாடலில் பிரபுதேவா அமைத்த நடனத்தை ஆட மறுத்துள்ளார். அதன்பிறகு, பிரபுதேவா அவரிடம், சமாதானம் சொல்லி, இந்த நடனம் உங்களுக்கு சரியாக இருக்கும். பெரிய பெயர் கிடைக்கும் என்று சொல்ல அவரின் பேச்சை ஏற்றுக்கொண்டு விஜயகாந்த் அந்த பாடலில் ஆடி முடித்துள்ளார்.