Advertisment

கடற்கரையில் ஹோலி கொண்டாட்டம்... இது என் அனுபவம் : அனிதா விஜயகுமார் வைரல் பதிவு

வெளிநாட்டில் டாக்டராக பணியாற்றி வந்த அனிதா விஜயகுமார் சமீபத்தில் சென்னையில் சொந்த வீடு வாங்கியதாக தகவல் வெளியானது.

author-image
WebDesk
New Update
Holi Vijayakumar daughter

அனிதா விஜயகுமார்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகர் விஜயகுமாரின் 2-வது மகள் அனிதா விஜயகுமார் மருத்துவராக பணியாற்றி வரும் நிலையில், தற்போது அவர் தனது நண்பர்களுடன் கடற்கரையில் ஹோலிப்பண்டிகையை கொண்டாடிய சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் முக்கியமானவர் விஜயகுமார். ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என பலதரப்பட்ட கேரக்டரில் நடித்து புகழ்பெற்றுள்ள இவருக்கு முத்துக்கண்ணு, மஞ்சுளா என இரு மனைவிகள். இதில் முதல் மனைவி முத்துகண்ணுவுக்கு கவிதா, அனிதா அருண்விஜய் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். மஞ்சுளாவுக்கு, வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என 3 பிள்ளைகள் உள்ளனர்.

இதில் கவிதா சரத்குமாருடன் கூலி என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு திருமணம் செய்துகொண்ட அவர், திரைப்படங்களில் நடிக்கவில்லை. திரைத்துறை பக்கம் திரும்பி பார்க்காத 2-வது மகள் அனிதா மருத்துவம் படித்துள்ளார். 3-வது மகனான அருண்விஜய் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.

அதேபோல் விஜயகுமார் – மஞ்சுளா தம்பதிக்கு பிறந்த வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய மூவருமே திரைத்துறையில் ஒரு சில படங்களில் நடித்துள்ளனர். இதில் ப்ரீத்தா இயக்குனர் ஹரியை திருமணம் செய்துகொண்டுள்ளார். விஜயகுமார் வீட்டில் உள்ள அனைவருமே சினிமா மற்றும் அது தொடர்பான பணிகளில் இருந்து வரும் நிலையில், சினிமா தொடர்பான பணிகளில் இல்லாதவது தான் அனிதா விஜயகுமார்.

வெளிநாட்டில் டாக்டராக பணியாற்றி வந்த அனிதா விஜயகுமார் சமீபத்தில் சென்னையில் சொந்த வீடு வாங்கியதாக தகவல் வெளியானது. மேலும் இந்த வீட்டின் கிரகப்பிரவேஷத்தை முடித்த அனிதா விஜயகுமார், சமீபத்தில் தனது மகளின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார். இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. இணையத்தில் ஆக்டீவாக இருக்கும் அனிதா விஜயகுமார் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது நண்பர்களுடன் ஹோலி கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த பதிவில், "உங்கள் மனதில் உறுதியாக இருந்தால் நீங்கள் எப்போதும் சந்தோஷமான விஷயங்களை அனுபவிக்க முடியும் என்பது என்னுடைய அனுபவம். நான் என் சென்னை பெண்கள் அணியுடன் சந்தோஷமாக ஹோலி பண்டிகையை கொண்டாடினேன். பெண்கள் நீங்கள் மிகவும் அற்புதமாக இருந்தீர்கள். அந்த மாலை நேரம் எனக்கு நிறைய பாசிட்டிவான அன்பும், சிரிப்பும் கிடைத்தது. அதனாலேயே இந்த நாள் ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

tamil cinema actress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment