ஒரு படம், 38 டைவர்ஸ் கேஸ் ஸ்டாப் ஆச்சி; இந்த படத்துக்கு இப்படி ஒரு வரலாறு இருக்கா?

தற்போது அனுஷ்காவுடன் காதி மற்றும் தமிழில் சிறை உள்ளிட்ட படங்களில் நடித்து முடிதுள்ளார். இந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ளது

தற்போது அனுஷ்காவுடன் காதி மற்றும் தமிழில் சிறை உள்ளிட்ட படங்களில் நடித்து முடிதுள்ளார். இந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ளது

author-image
WebDesk
New Update
Vikram Prabhu

விக்ரம் பிரபு

இன்றைய காலக்கட்டத்தில், வீட்டில் பார்த்து செய்து வைத்த திருமணமாக இருந்தாலும், காதல் திருமணமாக இருந்தாலும் விவாகரத்து என்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. ஆனால் தமிழில் வெளியான ஒரு படத்தை பார்த்து 38 விவாகரத்து வழக்குகள் நிறுத்தப்பட்டதாக நடிகர் விக்ரம் பிரபு தெரிவித்துள்ளார்.

Advertisment

கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான விக்ரம் பிரபு, அடுத்து அரிமா நம்பி, துப்பாக்கி முனை, வெள்ளக்கார துரை, உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார். அதேபோல் வரலாற்று பின்னணியில் உருவான, பொன்னியின் செல்வன், 1 மற்றும் 2-ம் பாகத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இவர், தற்போது அனுஷ்காவுடன் காதி மற்றும் தமிழில் சிறை உள்ளிட்ட படங்களில் நடித்து முடிதுள்ளார். இந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ளது

சமீபத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான லவ் மேரேஜ் திரைப்படம் விமர்சனரீதியாக பாராட்டுக்களை பெற்ற ஒரு படமாக மாறியது. தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம் இறுகப்பற்று. விக்ரம் பிரபு மட்டும் இல்லாமல், நடிகர் ஸ்ரீ, விதார்த், அபர்நதி, ஷர்தா ஸ்ரீநாத், சானியா அய்யப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனது. யுவராஜ் தயாளன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

திருமணமான தம்பதிகளுக்கு இடையில் நடக்கும் ஈகோ மோதல்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பலரின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தது. அதே சமயம் இந்த படம் சமூகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நடிகர் விக்ரம் பிரபு கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இறுகப்பற்று படம் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் பெரிய ரீச் கிடைத்தது. 2-வது வாரத்தில் திருச்சியில் 38 டைவர்ஸ் கேஸ் வாபஸ் ஆனது.

Advertisment
Advertisements

இந்த படத்தின் தாக்கம் சொல்லாமலே மக்களுக்கு புரிய தொடங்கியது என்று நாங்கள் சந்தோஷப்பட்டோம். இந்த கதையை முடித்துவிட்டு, இதன் மூலம் 1000 திருமணங்கள் பாதுகாக்கப்படும் என்று நினைத்தோம். கல்யாணம் பண்ணிக்கிட்டு பேசவே தெரியாதவர்கள் எப்படி வாழ்க்கயைில் ஒன்றாக வாழ்வார்கள்? இதுதான் எங்கள் நோக்கமாக இருந்தது என்று விக்ரம் பிரபு கூறியுள்ளார்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: