/tamil-ie/media/media_files/uploads/2023/06/Aishwarya-Lakshmi1.jpg)
ஐஸ்வர்யா லட்சுமி
ஐஸ்வர்யா லட்சுமி டாக்டருக்கு படித்துவிட்டு சினிமாவில் நடிப்பது எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்று அவரது பெற்றோர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளனர்.
மலையாள படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா லட்சுமி விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தனுஷின் ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ஐஸ்வர்ய லட்சுமி நடிப்பில் சமீபத்தில் கட்டா குஸ்தி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Aishwarya-Lakshmi.jpg)
தற்போது தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்ய லட்சுமி சினிமாவில் நடிப்பது தங்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்றும், அவர் சினிமா துறையை தேர்வு செய்ததில் எங்களுக்கு விருப்பம் இல்லை என்றும் அவரது பெற்றோர்கள் கூறியுள்ளனர். சினிமா ஒரு கூத்தாடி தொழில் என்று இன்னும் நினைக்கும் பலர் உள்ளனர். அதனால் தான் ஐஸ்வர்யா சினிமாவில் நடிப்பது வருத்தமாக உள்ளது.
மருத்துவம் படித்து விட்டு மகள் டாக்டராக போகிறார் என்று நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் திடீரெ மாடலிங்கில் இறங்கி நடிகையாகிவிட்டார் என்று அவரது பெற்றோர் கூறியுள்ள நிலையில்,தினம் தினம் போராட்டத்தில் மீண்டும் வந்து தான் நடித்து வருவதாக ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார். ஐஸ்வர்யா லட்சுமியின் இந்த பேச்சு திரையுலகில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.