Advertisment

விஜய் கட்சியில் இணைகிறேனா? உண்மை இதுதான்: நடிகை ஆண்ட்ரியா ஓபன் டாக்!

நான் என்ன ஆசைபட்டேனோ அதன்படி நான் நடித்து விட்டேன். வடசென்னை 2 படத்தில் சந்திரா கதாபாத்திரத்தில்‌ மீண்டும் நடிப்பேன் என்று ஆண்ட்ரியா கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
andrea

புதுச்சேரி பாபு ராஜேந்திரன்

Advertisment

புதுச்சேரி நகைக்கடை திறப்பில் பாட்டுப்பாடி அசத்திய நடிகை ஆண்ட்ரியா. விஜய் துவக்கியுள்ள கட்சியில் இணைவீர்களா என கேள்விக்கு அரசியலுக்கு வரும் நோக்கமெல்லாம் எனக்கு எதுவும்‌ இல்லங்க என்றும் வடசென்னை 2 படத்தில் சந்திரா கதாபாத்திரத்தில்‌ மீண்டும் நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மிஷன் வீதியில் புதிய (Lille Challani ) நகைக்கடை திறப்பு விழாவில் நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா  திறந்து வைத்து நகைகளை பார்வையிட்டார். தொடர்ந்து வெளியே ரசிகர்களை சந்தித்த அவர் ரசிகர்கள் வேண்டுகோளுக்கு ஏற்ப பாடல்களை பாடியது அனைவரையும் வியக்க வைத்த ஆண்ட்ரியா குறிப்பாக, ஓ சொல்றியா மாமா ஓ சொல்றேன் மாமா என்ற பாடலை பாடி ரசிகர்களை கிளுகிளுப்பு ஆக்கினார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், புதிதாக நான் பாடிய பாடல்கள் தற்போது வரவில்லை, ஆனால் நான் பாடிக்கொண்டுதான் உள்ளேன்,வரலாற்று படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். விஜய் துவக்கியுள்ள கட்சியில் இணைவீர்களா என்று கேட்கிறார்கள். எனக்கு அரசியலுக்கு வரும் நோக்கமெல்லாம் எனக்கு எதுவும்‌ இல்லங்க. நான் என்ன ஆசைபட்டேனோ அதன்படி நான் நடித்து விட்டேன்.

திரில்லர், ஹாரர், அட்வான்ச்சர், லவ் ஸ்டோரி என பண்ணியிருக்கேன் என ஒரு அளவிற்கு நடித்துவிட்டேன். வடசென்னை 2 படத்தில் சந்திரா கதாபாத்திரத்தில்‌ மீண்டும் நடிப்பேன் என்று கூறிய ஆண்ட்ரியா,ஓ சொல்றியா மாமா என்கிற பாடியபோது  ரசிகர்கள் உற்சாகமாக விசில் சத்தம் எழுப்பினர். தொடர்ந்து அவர் போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து சென்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Andrea Jeremiah Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment