என்னை விட சூப்பரா நடிச்சிட்டியே... கடுப்பில் ஷூட்டிங்கை பாதியில் நிறுத்திய நடிகை: கடைசியில் இயக்குனர் வைத்த ட்விஸ்ட்!

படத்தில் குழந்தை இல்லாத பானுமதி ஏழையாக இருக்கும் தனது தங்கை சவுக்கார் ஜானகியின் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பார். மேலும் சவுக்கார் ஜானகிக்கும் அந்த குழந்தைக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லிவிடுவார்.

படத்தில் குழந்தை இல்லாத பானுமதி ஏழையாக இருக்கும் தனது தங்கை சவுக்கார் ஜானகியின் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பார். மேலும் சவுக்கார் ஜானகிக்கும் அந்த குழந்தைக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லிவிடுவார்.

author-image
WebDesk
New Update
Bhanumathi

தென்னிந்திய சினிமாவில் பல திறமைகளை உள்ளடக்கிய முக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்த நடிகை பானுமதி, ஒரு காட்சியில் தன்னை விட, தனது தங்கையாக நடித்த நடிகை சிறப்பாக நடித்துவிட்டார் என்பதால் படப்பிடிப்பையே பாதியில் நிறுத்தியுள்ளார்.

Advertisment

இந்திய சினிமாவில் நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், எடிட்டர் என பன்முக திறமை கொண்ட நடிகை என்று பெயரேடுத்த பானுமதி, 1962-ம் ஆண்டு ஏ.வி.எம்.தயாரிப்பில்,  கிருஷ்ணன் – பஞ்சு இயக்கத்தில் வெளியான படம் அன்னை என்ற படத்தில் நடித்திருந்தர். இந்த படத்தில் இவரின் தங்கையாக, சவுக்கார் ஜானகி நடித்திருந்தர். படத்தில் குழந்தை இல்லாத பானுமதி ஏழையாக இருக்கும் தனது தங்கை சவுக்கார் ஜானகியின் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பார்.

மேலும் சவுக்கார் ஜானகிக்கும் அந்த குழந்தைக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லிவிடுவார். ஒருமுறை அந்த குழந்தைக்கு உடல்நிலை சவுக்கார் ஜானகி, கோவில்ல சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வந்து மகனுக்கு வியூதி வைக்க போகும்போது அதை பானுமதி தடுத்துவிடுவார். இந்த காட்சியில், என் மகனுக்கு விபூதி வைக்க கூட விடமாட்டாயா என்று சவுக்கார் ஜானகி அழுது புலம்பி சிறப்பாக நடித்திருந்தார். அவரின் நடிப்பை பார்த்த பானுமதி, கடுப்பாகி இருமல் வந்தது போல் நடித்து படப்பிடிப்பை நிறுத்தியுள்ளார்.

சவுகார் ஜானகி சூப்பரா நடித்துவிட்டார். இதனால் இந்த படத்தில் நாம் வில்லி என்று ஆக்கப்படுவோம் என்று உணர்ந்து, பானுமதி வேண்டுமென்றே இவ்வாறு செய்துள்ளார். இதனால் இயக்குனர் கட் என்று சொல்ல, மீண்டும் அந்த காட்சியை படமாக்கும் நிலை உருவாகியுள்ளது. அதன்பிறகு மீண்டும் படமாக்கும்போது முதல் காட்சியில் வந்த அந்த நடிப்பு சவுகார் ஜானகிக்கு வரவில்லை. இதனால் நிம்மதியாக நடித்த பானுமதி, இயக்குனர் 2-வதாக படமாக்கப்பட்ட காட்சியை தான் வைப்பார் என்று நினைத்து மகிழ்ச்சியாக இருந்துள்ளார்.

Advertisment
Advertisements

அதே சமயம் இயக்குனர் கிருஷ்ணன் – பஞ்சு இருவரும் சவுகார் ஜானகியின் முதல் காட்சியையும், பானுமதியின் 2-வது காட்சியையும் இணைந்து படத்தில் சேர்த்துள்ளனர். பானுமதி வேண்டுமென்றேதான் படப்பிடிப்பில் இரும்பினார் என்பது சவுகார் ஜானகி உட்பட அனைவருக்கும் நன்றாக தெரியும். ஆனால் அவர் ஒரு பெரிய நடிப்பை என்பதால், யாரும் கேட்க முடியவில்லை என்று படத்தை தயாரித்த ஏ.வி.எம்.குமரன், ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Tamil Cinema Update Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: