/indian-express-tamil/media/media_files/2025/08/22/actress-bharathi-2025-08-22-19-21-17.jpg)
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு காதலியாக நடித்த நடிகை ஒருவர், அவரது மகன் பிரபுவுக்கு அண்ணியாக நடித்துள்ளார். அந்த நடிகை, பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் விஷ்ணுவர்த்தனின் மனைவி என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை பாரதி. 1966-ம் ஆண்டு தனது 16 வயதில், டூடி டோடப்பா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர், கல்யாண் குமார் இயக்கம் மற்றும் நடிப்பில், லவ் இன் பெங்களூர், ராஜ்குமாருடன் எம்மே தம்மன்னா, சந்தியா ராகா, மது மாலதி என 1966-ம் ஆண்டு தொடர்ந்து 4 கன்னட படங்களில் நடித்திருந்தார். அதே ஆண்டு எம்.ஜி.ஆருடன் நாடோடி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் சந்த்ரோதயம், சிவாஜியுடன் உயர்ந் மனிதன், உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள பாரதி, எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, முத்துராமன், ரவிச்சந்திரன் என பல முன்னணி நட்சததிரங்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார், 1975-ம் ஆண்டு, கன்னட நடிகர் விஷ்ணுவர்ததனை திருமணம் செய்துகொண்ட பாரதி, திருமணத்திற்கு பின்னரும், நடிப்பில் கவனம் செலுத்தினார், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள பாரதி, அப்பாவுக்கு ஜோடியாகவும் மகனுக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார்.
தங்க சுரங்கம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் சவாஜியுடன் நடித்துள்ள நடிகை பாரதி, பிரபு நடித்த உறுதி மொழி படத்தில் அவரின் அண்ணியாக நடித்திருந்தார், அதேபோல், பூவும் பொட்டும் படத்தில் முத்துராமனுக்கு ஜோடியாக நடித்த பாரதி, கட்ட பஞ்சாயத்து படத்தில் அவரது மகன் கார்த்திக்கு அம்மா கேரக்டரில் நடித்திருப்பார். கடைசியாக 1998-ம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளியான சுந்தர பாண்டியன் படத்தில் அவரது அம்மா கேரக்டரில் நடித்திருந்த பாரதி அதன்பிறகு தமிழில் நடிக்கவில்லை.
அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பல நிகழவுகள் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் எம்.ஜி.ஆருடன் நடிக்கும்போது அவர் என்னை தொட்டாலே ஒரு மாதிரி இருக்கும். இது அவருக்கும் தெரிந்தது. அதன்பிறகு மாஸ்டரிடம் சொல்லி சொஞ்சம் சகஜமாக இருக்க சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். அதேபோல் சிவாஜியுடன் நடிக்கும்போது அவர் 7 மணிக்கு கால்ஷீட் என்றால் 6.45 மணிக்கே வந்துவிடுவார். அவரை போல் நானும் வந்துவிடுவேன். ஆனால் செட்டுக்குள் போகும்முன்பு, என் கையை பிடித்து இழுத்து நான்தான் முதலில் போவேன் என்று சொல்வார்.
அதேபோல் தங்க சுரங்கம் படத்தில் நடிக்கும்போது, ஒரு காட்சியில் நான் அவரை போலவே நடித்திருந்தேன். இதை பார்த்துவிட்ட இவ என்னை போலவே நடித்திருக்கிறாள் என்று சொல்லி பாதி காட்சியை வெட்டிவிட்டார் என்று நடிகை பாரதி எதார்த்தமாக கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.