/indian-express-tamil/media/media_files/IrmAk04GZ9RsiHPYyZD5.jpg)
மாஸ்க் படத்தில் திரைப்பட கலைஞர்களுக்கு அடிமட்ட அளவுக்கு சம்பளம் பேசுகிறார்கள். குறைந்தபட்சம், உங்க மேனேஜர் கிட்ட மரியாதையா பேச சொல்லிக்குடுங்க வெற்றிமாறன் சார் என திரைப்பட நடிகை தீபா பாஸ்கர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவர் க்ராஸ்ரூட் ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவான கவினை வைத்து மாஸ்க் என்ற படத்தை தயாரித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
இந்நிலையில் மாஸ்க் படத்தில் நடித்து வரும் நடிகை தீபா பாஸ்கர், அவருக்கு குறைவான அளவு சம்பளம் பேசியதாக படக்குழு மீது கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக தீபா பாஸ்கர் தனது முகநூல் பக்கத்தில், “விடுதலை படத்தின் இறுதி கட்டப்பணியில் மிக மும்முரமாக இருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், தற்போது வெற்றிமாறன் ப்ரொடக்ஷனில் கவின் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் மாஸ்க். இந்தப் படத்தில் திரைப்பட கலைஞர்களுக்கு அடிமட்ட அளவுக்கு சம்பளம் பேசுகிறார்கள். குறைந்தபட்சம், உங்க மேனேஜர் கிட்ட மரியாதையா பேச சொல்லிக்குடுங்க சார். வெற்றிமாறன் சார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும், சுய மரியாதை தான் முக்கியம் என்று சொல்லி நான் விலகிவிட்டேன்,“ என்று குறிப்பிட்டு உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.