தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்த தேவயானி தற்போது தனது மகளுக்கு மேடையில் கிடைத்த பாரட்டுக்களை பார்த்து கண்கலங்கிய வீடியோ வைரலாகி வருகிறது,
Advertisment
தமிழ் சினிமாவில் அஜித் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகை தேவயானி. மும்பையில் பிறந்த இவர், பெங்காலி, படத்தில் அறிமுகமாகி, மலையாளம் மற்றும் இந்தி படங்களில் நடித்திருந்தார். 1995-ம் ஆண்டு வெளியான தொட்டஞ்சிணுங்கி என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன்பிறகு பிரஷாந்த் – அஜித் இணைந்து நடித்த கல்லூரி வாசல் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த தேவயானி, அகத்தியன் இயக்கத்தில் வெளியான காதல்கோட்டை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் தமிழக அரசின் சிறந்த படத்திறகான விருதை வென்றிருந்தது. விஜயுடன் நினைத்தேன் வந்தாய், ப்ரண்ட்ஸ், அஜித்துடன் நீ வருவாய் என, விஜயகாந்துடன் வல்லரசு உள்ளிட்ட வெற்றிப்படங்களில் தேவயானி நடித்திருக்கிறார்.
கடைசியாக 2003-ம் ஆண்டு வெளியான காதலுடன் என்ற படத்தில் நாயகியாக நடித்த தேவயானி, அதன்பிறகு படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடிக்க தொடங்கினார். 1999-ம் ஆண்டு தான் இயக்கிய நீ வருவாய் என படம் உட்பட தான் இயக்கிய 4 படங்களிலும் தேவயைானியை நாயகியாக நடிக்க வைத்த இயக்குனர் ராஜகுமாரன், அவரை காதலித்து கடந்த 2001-ம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
Advertisment
Advertisements
இவர்களுக்கு தற்போது இரு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், தேவயானி தற்போது சின்னத்திரை சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இதனிடையே ஜீ தமிழில் ரியாலிட்டி ஷோவில் தேவயானியின் மகள் இனியா பாடல் பாடி அசத்தி வருகிறார். இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனது மாமா நகுலுடன் இணைந்து, இனியா ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ என்ற பாடலை பாடிய வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவியது.
அந்த வகையில் தற்போது, அபியும் நானும் படத்தில் வரும் ‘வா வா என் தேவதையே’ என்ற பாடலை இனியா மேடையில் பாடியுள்ளார். படத்தில் இந்த பாடல் ஒரு தந்தை தனது மகளுக்கு பாடும் வகையில் அமைந்திருக்கும். ஆனால் இந்த பாடல் படத்தில் இல்லாத வகையில் பெண் குரலாக இனியா பாடியுள்ளார். இதை பார்த்து அந்த பாடலுக்கு இசையமைத்த வித்யாசாகர், படத்தின் இயக்குனர் ராதாமோகன் ஆகியோ இனியாவுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
அதேபோல், இந்த பாடல் பாடியது குறித்து, பேசிய தேவயானி, முதலில் இந்த பாடலை பாட இனிய தயங்கினாள். ஆனால் நான் தான் நீ பாடு ஒரு புது வெர்ஷனை உருவாக்கு என்று சொன்னேன். இவள் பாடலை பாடி முடித்தவுடன், என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது என்று கூறியுள்ளார். அதேபோல் இந்த பாடலை தனது அப்பா ராஜகுமாரனுக்கு டெடிகேட் செய்வதாகவும் டெலிக்காஸ்ட் ஆகும்போது நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று இனியாக கூறியுள்ளார்.