எல்லாம் என் விதி... இப்படித்தான் கல்யாணம் ஆகுனும்னு எழுதி இருக்கு: கணவர் பற்றி மனம் திறந்த தேவயானி!

முதன் முதலில் ஹிந்தியில் ஒரு படத்தில் நடித்தேன். ஆனால் அந்த படம் இன்று வரை ரிலீஸ் ஆகவில்லை. அதன் பிறகு மலையாளத்திற்கு வந்தேன். தமிழில் என்னுடைய முதல் திரைப்படம் தொட்டா சிணுங்கி என தேவயானி கூறியுள்ளார்.

முதன் முதலில் ஹிந்தியில் ஒரு படத்தில் நடித்தேன். ஆனால் அந்த படம் இன்று வரை ரிலீஸ் ஆகவில்லை. அதன் பிறகு மலையாளத்திற்கு வந்தேன். தமிழில் என்னுடைய முதல் திரைப்படம் தொட்டா சிணுங்கி என தேவயானி கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Devayani Husa

தமிழ் சினிமாவில், விஜயகாந்த், சரத்குமார், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகை தேவயானி, இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். இதனிடையே தனது கணவர் ராஜகுமாரன் பற்றியும், அவருடன் காதல் ஏற்பட்ட அனுபவம் குறித்து நடிகை தேவயானி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisment

முதன் முதலில் ஹிந்தியில் ஒரு படத்தில் நடித்தேன். ஆனால் அந்த படம் இன்று வரை ரிலீஸ் ஆகவில்லை. அதன் பிறகு மலையாளத்திற்கு வந்தேன். தமிழில் என்னுடைய முதல் திரைப்படம் தொட்டா சிணுங்கி. பம்பாய் படத்தில் ‘ஹம்மா ஹம்மா’ பாடலுக்கு நடனமாடிய நாகேந்திர பிரசாத்க்கு ஜோடி என்று சொல்லி நடிக்க வைத்தனர். அந்த படத்தில் ரேவதி, ரகுவரன் ஆகியோரும் நடித்தனர். ரகுவரனுக்கு தங்கையாக நாகேந்திரபிரசாத்க்கு ஜோடியாக நான் நடித்தேன்.

சூர்யவம்சம் படத்தில் அவர் (ராஜகுமாரன்) உதவி இயக்குனராக இருந்தார். அப்போதே அவரை தெரியும். ஆனால், நெருக்கமான பழக்கம் இல்லை. அதன்பிறகு அவரின் நீ வருவாய் படத்தில் நான் நடித்தேன். படத்தில் அவர் எழுதிய வசனத்தால்தான் நான் அவரிடம் மயங்கினேன். ஒரு நல்ல இதயம் கொண்ட மனிதர் ஒரு நல்ல படைப்பை கொடுக்க முடியும் அப்படித்தான் நீ வருவாய் என படம் ஒரு காதல் என்சைக்ளோபீடியாவாக இருந்தது. அதனால் இவருக்குள்ளும் நல்ல காதல் இருக்கும் என்று நான் நம்பினேன்.

அதுமட்டுமல்ல அந்த படப்பிடிப்பின் போது என்னை அவர் கவனித்துக் கொண்ட விதம், ஒரு பெண்ணிடம் எந்த அளவுக்கு பழக வேண்டும் மரியாதையாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவரிடம் நான் பார்த்தேன். அவருக்கு எந்த ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது .இந்த மாதிரி கேரக்டர்களால் தான் அவரை எனக்கு மிகவும் பிடித்தது. அவர் என்னை எப்படியெல்லாம் அழகாகக காட்ட வேண்டும் என்பதை பற்றி நிறைய காட்சிகள் எடுத்தார். அப்போதே அவரை பிடித்துவிட்டது.

Advertisment
Advertisements

முதன்முதலில் அவர்தான் எனக்கு காதல் சொன்னார். அப்போது நான் நோ என்று தான் சொன்னேன். என்னுடைய வீட்டில் சம்மதிக்க மாட்டாங்க அப்படின்னு தான் நான் சொன்னேன். ஆனால் எப்படி இந்த மாதிரி ஒரு முடிவை எடுத்தேன் என இதுவரை எனக்கு தெரியவில்லை. என்னுடைய அம்மா அப்பாவை மீறி நான் எந்த ஒரு செயலும் செய்ததே கிடையாது. அதன்பிறகு நான் எதை பற்றியும் யோசிக்கவில்லை. முதல் குழந்தை பிறந்தபோது கூட, என் அப்பா அம்மா ஞாபகம் வராத மாதிரி என்னை அப்படி பார்துக்கொண்டார்.

2-வது குழந்தை பிறந்தபோது நானே என் அப்பா அம்மாவை தேடி போய்விட்டேன். அதன்பிறகு அவர்களும் பேச தொடங்கிவிட்டனர். எல்லாம் என் தலைவிதி. நான் இவரைத்தான் கல்யாணம் பண்ண வேண்டும். இப்படித்தான் கல்யாணம் பண்ண வேண்டும் என்று என் தலையில் எழுதியுள்ளது என்று தேவயானி மனம் திறந்து பேசியுள்ளார். 

Actress Devayani

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: