Advertisment

சினேகனுடன் ஒரு தலை காதல்: நான் வில்லியாக மாறிய தருணம்; நடிகை கன்னிகா ஓபன் டாக்!

கவிஞர் சினேகன் மீது பலர் ஒருதலை காதலில் இருந்தாகவும் அவர்களிடம் தான் வில்லியாக மாற்றி என்ன செய்தேன் என்றும் நடிகை கன்னிகா கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Kannika and Snehan

தனது கணவர் சினேகனை பல பெண்கள் ஒருதலையாக காதலித்தனர். ஆனால் அவர்களிடம் நான் சொல்லிக்கொண்டஒரு ஒன்று தான் என்று சின்னத்திரை நடிகை கன்னிகா ரவி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

1997-ம் ஆண்டு புத்தம்புது பூவே என்ற படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக அறிமுகமானவர் சினேகன். அவரது துரதிஷ்டவசமாக அந்த படம் வெளியாகவில்லை. அதன்பிறகு,  2000-ம் ஆண்டு தம்பி ராமையா இயக்கத்தில் வெளியான மனுநீதி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்தவர் தான் சினேகன்.

குறிப்பாக, பாண்டவர் பூமி, மௌனம் பேசியதே, ஏப்ரல் மாதத்தில், சொக்க தங்கம், சாமி, மன்மதன், கழுகு உள்ளிட்ட படங்களில் சேரன் எழுதிய பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாடல் ஆசிரியராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சினேகன், பிக்பாஸ் முதல் சீசனில், போட்டியாளராக பங்கேற்று இறுதிவரை பிக்பாஸ் வீட்டில் இருந்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் சினேகன் பிரபலமானார்.

யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சினேகன், கோமாளி, பூமி, உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த சினேகன், கடைசியாக அருண்விஜய் நடிப்பில் வெளியான யானை படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதேபோல் சின்னத்திரையில், பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்திருந்த சினேகன், கடந்த 2021-ம் ஆண்டு சின்னத்திரை நடிகை கன்னிகா என்பவரை திருமணம் செய்துகொண்டார். 7 வருடங்களாக காதலில் இருந்த இவர்கள், திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்பதற்காக தங்களது காதலை வெளியில் தெரியாமல் மறைத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் இருந்து சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்த கன்னிகாவுக்கு ஒரு படத்தில் துணை நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்பிறகு, சின்னத்திரையில் கல்யாண வீடு என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தார். கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்து பல ஹிட் பாடல்களை கொடுத்தும் சினேகன் யார் என்று வெளியில் அறிமுகப்படுத்தியது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சியில் தான் ஒரு பெண்னை காதலிப்பதாக கூறிய சினேகன், நிகழ்ச்சி முடித்து கன்னிகாவை திருமணம் செய்துகொண்டார்,

சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை கன்னிகா, சினேகன் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார். இதில் திருமணத்திற்கு முன்பு சினேகனை பலர் சைட் மற்றும் ஒருதலையாக காதலித்தனர். நான் சினேகனை காதலித்தபோது, பலமுறை அவரது வீட்டுக்கு சென்றிருக்கிறேன். அப்போது அவரை நிறையபேர் ஒருதலையாக காதலித்தனர். எங்கள் விஷயம் அவர்களுக்கு தெரியாது என்பதால், சினேகன் வீட்டில் தனியாக இருக்கிறார் என்பதற்காக அவரை பார்க்க பலர் வருவார்கள்.

அப்போது அவர்களிடம் பேச்சு கொடுத்து நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காட்டி, நாங்கள் காதலிக்கிறோம். விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம் என்று சொல்வேன். எங்கள் கல்யாணத்திற்கு நீங்கள் தான் முன்னின்று வேலைகள் செய்ய வேண்டும் என்று சொல்லும்போது அவர்கள் என்ன ரியாக்ஷன் கொடுக்கிறார்கள் என்பதை பார்ப்பேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அந்த இடத்தில் நான் ஒரு வில்லி. இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது என்று கன்னிகா கூறியுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment