80-90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாக இருந்த சகோதரிகள் அம்பிகா – ராதா. முன்னணி நடிகர்களுடன் இணைந்து இருவரும் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நிலையில், ஒரு கட்டத்தில் வாய்ப்பு குறைந்ததால் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டனர். இதில் ராதாவின் மகள்கள் கார்த்திகா மற்றும் துளசி ஆகிய இருவரும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினாலும் அவர்களுக்கு சரியான வெற்றி கிடைக்கவில்லை.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த 'கோ' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ராதாவின் மூத்த மகள் நடிகை கார்த்திகா. அதன்பிறகு வா டீல் என்ற படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் வெளியாகாத நிலையில், பாரதிராஜா இயக்கத்தில் அண்ணக்கொடி என்ற படத்தில் நடித்தார். கோ படம் வெற்றி பெற்றாலும், இந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.
கடைசியாக எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா விஜய் சேதுபதி நடித்த புறம்போக்கு என்றும் பொதுவுடைமை என்ற படத்தில் நடித்திருந்தார். இதனிடையே தற்போது நடிகை கார்த்திகாவுக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இது குறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது மோதிரத்தை மையமாக வைத்து ஒருவரை கட்டிப்பிடிக்கும் படத்தை பகிர்ந்து கொண்டார்.
படங்களைப் பகிர்ந்த கார்த்திகா நாயர், எளிமையான அமுலேட் எமோஜியுடன் பதிவிட்டுள்ள நிலையில், தான் கட்டிபிடித்துள்ள அந்த ஆண் யார் என்ற விபரங்களையும் வெளியிடவில்லை. ஆனாலும் அவரது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்க வேண்டும். மும்பையில் உள்ள போடார் இன்டர்நேஷனல் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த கார்த்திகா நாயர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்-இணைக்கப்பட்ட கல்லூரியில் வணிகத்தில் பட்டம் பெற்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“