Advertisment

சினிமாவை விட்டு விலகும் நயன்தாரா? ரீ என்ட்ரி கொடுக்கும் லட்சுமி மேனன் : டாப் 5 சினிமா

குட்டிப்புலி படத்தின் மூலம் அறிமுகமான லட்சுமி மேனன் அதனைத் தொடர்ந்து, கும்கி, நான் சிகப்பு மனிதன், பாண்டியநாடு, மஞ்சப்பை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
சினிமாவை விட்டு விலகும் நயன்தாரா? ரீ என்ட்ரி கொடுக்கும் லட்சுமி மேனன் : டாப் 5 சினிமா

அமெரிக்கர்களுக்கு தமிழ் பார்க்க சொன்ன ராஜமௌலி

Advertisment

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் குவித்தது. இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் பட்டி தொட்டி எங்கிலும் பட்டையை கிளப்பிய நிலையில், சமீபத்தில் இந்த பாடலுக்கு சர்வதேச விருது அறிவிக்கப்பட்டது. இதனிடையே சமீபத்தில் அமெரிக்க சென்ற ராஜமௌலி பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனை சந்தித்து பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து அங்குள்ள பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளித்த அவரிடம் அமெரிக்கர்களுக்கு இந்திய திரைப்படங்களை பார்க்க பரிந்துரை செய்ய சொன்னதாவும், இதற்கு ஒரு சில இந்தி படங்களை சொன்ன ராஜமௌலி இந்த பட்டியலில் வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தையும் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரீ-என்டரி கொடுக்கும் லட்சுமி மேனன்

குட்டிப்புலி படத்தின் மூலம் அறிமுகமான லட்சுமி மேனன் அதனைத் தொடர்ந்து, கும்கி, நான் சிகப்பு மனிதன், பாண்டியநாடு, மஞ்சப்பை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். இதில் வேதாளம் படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்திருந்த இவர் கடைசியாக தமிழில் புலிக்குத்தி பாண்டி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சன்டிவியில் நேரடியாக வெளியிடப்பட்டது. அதன்பிறகு பட வாய்ப்பு இல்லாமல் இருந்த லட்சுமி மேனன், தற்போது பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடித்து வரும் சந்திரமுகி 2 படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமாவில் இருந்து விலகும் நயன்தாரா?

முன்னணி நடிகையான நயன்தாரா கடந்த ஆண்டு தனது காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து இவர்களுக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்தது. தற்போது நயன்தாரா ஷாருக்கானுடன் ஜவான் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வரும் நிலையில், மகன்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதால் கைவசம் உள்ள படங்களை முடித்துக்கொண்டு சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

ஏ.எல்.விஜய் படப்பிடிப்பை முடித்த அருண்விஜய்

சினம் படத்திற்கு பிறகு நடிகர் அருண்விஜய் தற்போது இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். எமி ஜாக்சன் நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். பரபரப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜெயம்ரவி படத்தில் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராகியுள்ள படம் அகிலன். கடற்கரை மற்றும் துறைமுகத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில்,பிரியா பாவனி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நாயகிகளாக நடித்து வரும் நிலையில், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே அகிலன் படம் வரும் மார்ச் 10-ந் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Nayanthara
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment