/indian-express-tamil/media/media_files/J8D2TB3ixCYEqgsoteyN.jpg)
நடிகை மாளவிகா
முரளி, சினிமாவில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நடிகை மாளவிகா, 1999-ம் ஆண்டு வெளியான அஜித்தின் உன்னை தேடி என்ற படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, கார்த்திக் அஜித் இணைந்து நடித்த ஆனந்த பூங்காற்றே படத்தில் நடித்த மாளவிகா, அடுத்து ரோஜா வனம், பூப்பரிக்க வருகிறோம் என தொடர் வெற்றிப்படங்களில் நடித்திருந்தார்.
குறிப்பாக முரளிக்கு ஜோடியாக வெற்றிக்கொடி கட்டு, கார்த்தியுடன் லவ்லி, உள்ளிட்ட படங்கள் மாளவிகாவை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது. கடைசியாக லவ்லி என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்த மாளவிகா அதன்பிறகு, ஒரு பாடலுக்கு நடமாடுவது மற்றும் படங்களில் முக்கிய கேரக்டரில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில், திருட்டுப்பயலே படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருந்தார்.
சந்திரமுகி படத்தில் நாசரின் மகளாக நடித்திருந்த மாளவிகா, கடந்த 2007-ம் ஆண்டு, சுரேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில், சினிமாவில் இருந்து மாளவிகா ஒதுங்கினார். இது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ள அவர், நான் சினிமாவை விட்டு விலகுவேன் என்று நினைக்கவில்லை. திருமணத்திற்கு பின்பும் பல படங்களில் கமிட் ஆகியிருந்தேன்.
அப்போது நான் கர்ப்பமாக இருந்ததால், படங்களில் நடிக்க முடியாது என்று உறுதி செய்து வாங்கிய முன்பணத்தை திருப்பி கொடுத்துவிட்டேன். இதனால் தான் என்னால் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது என்று நடினைக மாளவிகா கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.