விரைவில் த்ரிஷ்யம் 3
மலையாளத்தில் மோகன்லால் மீனா நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியாகி மலையாள பாக்ஆபீஸை அடித்து நொறுக்கிய படம் த்ரிஷ்யம். ஜீத்து ஜோசப் இயக்கிய இந்த படத்தில் ஆஷா சரத் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்தியாவின் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படம் தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
தொடர்ந்து கடந்த ஆண்டு த்ரிஷ்யம் படத்தின் 2-ம் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப பெற்றது. இந்த படமும் தெலுங்கு கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட நிலையில், சமீபத்தில் த்ரிஷ்யம் 2-ம் பாகம் ஹிந்தியில் வெளியானது. இதனிடையே விரைவில் த்ரிஷ்யம் 3-ம் பாகம் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3-ம் பாகத்திற்கான க்ளைமேக்ஸ் இருப்பதாகவும் இதை வைத்து படத்தின் திரைக்கதை தயார் செய்ய உள்ளதாக ஜீத்து ஜோசப் கூறியுள்ளார்.
ஒடிடி தளத்தில் லவ்டுடே
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் லவ்டுடே. முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக வரவேற்பை பெற்று வரும் இந்த படம் தற்போது தெலுங்கில் டப் செய்து வெளியிடப்பட்டுள்ளது. உலகளவில் தற்போதுவரை 70 கோடிக்கு மேலாக வசூல் சாதனை நிகழ்த்தியுள்ள லவ்டுடே படம் வரும் டிசம்பர் 2-ந் தேதி ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
நடிகை மீனா மறுமணம்?
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா தற்போது அக்கா அண்ணி என கேரக்டர் நடிகையாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் மோகன்லாலுடன் நடித்த த்ரிஷ்யம் 2 படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீனாவின் கணவர் வித்யா சாகர் திடீரென மரணமடைந்தார். தற்போது இந்த இழப்பில் இருந்து மீண்டு வந்துள்ள மீனா மறுமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீனாவுக்கு சம்மதம் இல்லை என்றாலும் பெற்றோரின் விருப்பத்தின் காரணமாக மறுமணத்திற்கு சம்மதித்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவல் முற்றிலும் வதந்தி என்று மீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமாவை விட்டு விலகும் சாய் பல்லவி?
பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மலர் டீச்சராக பிரபலமான தமிழ் நடிகை சாய் பல்லவி தொடரி தமிழில் மாரி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் கமிட் ஆகியுள்ள சாய் பல்லவி விரைவில் சினிமாவை விட்டு விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்ஜியாவில் மருத்துவ படிப்பை முடித்த இவர், கோயம்புத்தூரில் மருத்துவமனை கட்டி அதை நிர்வகிக்க விரும்புவதாகவும் இதனால் நடிப்பில் இருந்து விலக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரஜினிகாந்தை சந்தித்த காமெடி நடிகர்
தமிழ் சினிமாவின் காமெடி நடிகரான ரோபோ சங்கர் சமீபத்தில் தனது 22-வது திருமண நாளை கொண்டாடியுள்ளார். இதற்காக குடும்பத்துடன் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.