/indian-express-tamil/media/media_files/KYfX63Awb7ZeYF2Q415w.jpg)
நடிகை மீரா ஜாஸ்மின்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த மீரா ஜாஸ்மின் தற்போது பிஸியாக படங்களில் நடித்து வரும் நிலையில் அவரது தந்தை மரணமடைந்துள்ளார்.
2001-ம் மலையாளததில் வெளியான சூத்திரதரன் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். தொடர்ந்து 2002-ம் ஆண்டு தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு விஜயுடன் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்சநேயா, ஆயுத எழுத்து, விஜயகாந்துடன் மரியாதை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ள மீரா ஜாஸ்மின் தமிழில் கடைசியாக விஞ்ஞானி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2014-ம் ஆண்டு வெளியானது. அதன்பிறகு மலையாளத்தில் மட்டும் நடித்து வந்த மீரா ஜாஸ்மின் விமானம் என்ற என்ற தெலுங்கு படத்தில் நடித்து ரீ-என்டரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து தமிழில் தி டெஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை மீரா ஜாஸ்மின் தந்தை ஜோசப் பிலிப் (83) மரணமடைந்துள்ளார். இது குறித்து தந்தையின் புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள மீராஜாஸ்மின், மீண்டும் சந்திக்கும்வரை என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், மீரா ஜாஸ்மின் தந்தை மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us