/tamil-ie/media/media_files/uploads/2023/08/Jailer1.jpg)
tamil cinema Jailer
ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்துள்ள நடிகை மிர்னா வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்னர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாணமாக தயாரித்துள்ள நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜெயிலர் படம் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 10) வெளியாக உள்ளது.
இதனிடையே ஜெயிலர் படத்தில் நடித்துள்ள நடிகை மிர்னா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், \--ஷூர்ஹாட் என்று நெருப்பு எமோஜியை பதிவிட்டுள்ளார். மேலும் கடந்த ஆகஸ்டில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை தொடங்கினோம், இதோ ரிலீசுக்கு தயாராகிவிட்டோம். தலைவர் மற்றும் குழுவினருடன் இந்த ஒரு வருடம் என் வாழ்வின் சிறந்த நேரம். அடுத்த 10 நாட்கள் இருக்கப்போவதால் தைரியமாக இருங்கள். அனைத்தும் ஒரு மனிதனுக்கான தலைவர், சூப்பர் ஸ்டார் என்று பதிவிட்டுள்ளார்.
Sureshot 🔥 #Jailer#superhappy#superproud
— Mirnaa (@mirnaaofficial) August 8, 2023
மிர்னாவின் ட்வீட்டைப் பார்த்து உற்சாகமடைந்த ரசிகர் ஒருவர், “சமீபத்தில் நீங்கள் அளித்த குட்டி குட்டி மாஸ் அப்டேட்டுகளுக்கு தலைவர் ரசிகர்கள் உங்களுக்கு மிகவும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.