/indian-express-tamil/media/media_files/2025/09/05/rajinikanth-and-prabhu-2025-09-05-11-44-59.jpg)
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட வெற்றிப்படங்களாக இருக்கும் ரஜினியின் முத்து, பிரபுவின் சின்னத்தம்பி, பிரஷாந்த் நடித்த திருடா திருடா உள்ளிட்ட படங்களில் நாயகி வாய்ப்பு எனக்கு தான் வந்தது என்று நடிகை மோகினி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில், தனது காந்த கண்களால் பலரின் கவனத்தை ஈர்த்த நடிகைகளில் முக்கியமானவர் மோகினி. 1987-ம் ஆண்டு ரகுவரன் நடிப்பில் வெளியான கூட்டுப்புழுக்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் அடுத்து 1991-ம் ஆண்டு வெளியான ஈராமான ரோஜாவே படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து பாலகிருஷ்ணாவுடன் ஆதித்யா 369 படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
தொடர்ந்து, இவர், கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தமிழில், பார்த்திபனுடன் உன்னை வாழ்த்தி பாடுகிறேன், கார்த்திக்குடன் நாடோடி பாட்டுக்காரன், பிரஷாந்தின் உனக்காக பிறந்தேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ரசிகர்கள் மனதில் நம்ம வீட்டு பெண் என்ற இமேஜ்ஜூடன் வலம் வந்த மோகினி, 90-களில் இறுதியில், தமிழ் சினிமாவை விட்டு விலகினார். தற்போது அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் பல நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.
இதில் பேசிய அவர், திருடா திருடா, சின்னத்தம்பி ஆகிய இரு படங்களும் உறுதியாக எனக்குதான் வந்தது. அதே சமயம், முத்து படத்தில் நடிப்பது குறித்து இறுதி முடிவில் நானும் மீனாவும் இருந்தோம். கடைசியில், மீனா, தேர்வாகி விட்டதாக தகவல் வந்தது, நான் அப்படியே விட்டுவிட்டேன். மீனா கூட நீங்கள் போய் கேட்டுப்பாருங்கள் என்று சொன்னார். நமக்கு ஒரு விஷயம் கிடைக்க வேண்டும் என்று இருந்தால் நாம் அதன் பின்னாடி செல்ல வேண்டிய அவசியமே இல்லை. காதல், வேலை, கல்யாணம், ஒரு வீடு வாங்குவது எதுவாக இருந்தாலும் இது பொருந்தும்.
முத்து படத்தில் கடைசி நிமிடம் வரை நானா மீனாவா என போட்டி போய்க்கொண்டே இருந்தது. ஆனால் மீனா என்று வந்தவுடன் நான் ரிலாக்ஸ் ஆகிவிட்டேன். சின்னத்தம்பி படம் எனக்கு கால்ஷீட் பிரச்னையால் நடிக்க முடியாமல் போனது. எனது முதல் படமான ஈரமான ரோஜாவே படம் நடிக்கும்போதே எனக்கு இந்த பட வாய்ப்பு கிடைத்தது, அக்ரிமெண்ட் இருந்ததால் அந்த படத்தை ஒப்புக்கொள்ள முடியவில்லை. 10 நாட்கள் வெயிட் பண்ண சொன்னாங்க, ஆனால் அவர்கள் வெயிட் பண்ணவில்லை. அதன்பிறகு தான் குஷ்பு அந்த கேரக்டரில் நடித்தார்,
அதேபோல் திருடா திருடா மட்டும் இல்ல, தளபதி படத்தில் ஷோபனா அல்லது பானுபிரியா இரு கேரக்டரில் ஒரு கேரக்டரில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது, ஆனால் கால்ஷீட் பிரச்னையால் முடியாமல் போனது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.