Advertisment

கோலாலம்பூர் முருகன் கோவிலில் கிஃட்: நயன்தாரா செம்ம சந்தோஷம்

தங்களது குழந்தைகளுக்கு உயிர் உலக் என்று பெயரிட்டுள்ள நயன் விக்கி தம்பதி சமீபத்தில் அவர்களின் முதல் பிறந்த நாளை கொண்டாடினர்.

author-image
WebDesk
New Update
Nayan Wikki

விக்னேஷ் சிவன் - நயன்தாரா

சமீபத்தில் தங்களது மகன்களின் முதல் பிறந்த நாளை கொண்டாடிய நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தற்போது மலேசியா சென்றுள்ள நிலையில், அங்கு ஒரு தம்பதியிடம் தங்களது மகன்களின் புகைப்படத்தை பெற்றுள்ளனர்.

Advertisment

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. நடிகர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டார். அடுத்து சில மாதங்களில் வாடகை தாய் மூலம் இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தது. தொடர்ந்து இவரும் குழந்தையை பத்திரமாக பார்த்து வருகின்றனர். அவ்வப்போது குழந்தைகளுடன் புகைப்படத்தையும் வெளியிட்டு வருகின்றனர்.

தங்களது குழந்தைகளுக்கு உயிர் உலக் என்று பெயரிட்டுள்ள நயன் விக்கி தம்பதி சமீபத்தில் அவர்களின் முதல் பிறந்த நாளை கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் குழந்தைகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியிருந்தனர். மேலும் திரைத்துறை பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் விக்கி நயன் ஜோடிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே மகன்களின் பிறந்த நாளை முன்னிட்டு மலேசியா சென்றுள்ள விக்கி நயன் தம்பதி சமீபத்தில் கோலாலம்பூரில் உள்ள முருகன் கோவிலுக்கு மகன்களுடன் சென்று தரிசனம் செய்துள்ளனர். அப்போது ஒரு மலேசிய தம்பதி  விக்கி நயன் ஜோடியின் இரட்டை குழந்தைகளை கைவண்ணப் படமாக வரைந்து அதனை பரிசாக அளித்துள்ளனர்.

இந்த புகைப்படத்தை பார்த்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் மகிழ்ச்சியடைந்த நிலையில், கடவுள் முருகன் வடிவில் தங்களது ஆண் குழந்தைகளை யதார்த்தமாக சித்தரித்ததற்காக தம்பதியருக்கு நன்றி தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nayanthara Vignesh Shivan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment