தங்களது குழந்தைகளின் முதல் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டு தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டுள்ளனர்.
தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக நயன்தாரா தனது நீண்டநாள் காதலரும் இயக்குனருமான விக்னெஷ் சிவனை கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டார். அடுத்த சில மாதங்களில் தங்கள் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகிவிட்டதாக அறிவித்து பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.
அதே சமயம் பெற்றோர் ஆன விக்கி – நயன் இருவருக்கும் ரசிகர்கள் தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குறித்த நிலையில், உயிர் உலகம் என்று தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைத்தனர். அதனைத் தொடர்ந்து தங்களது குழந்தைகளின் புகைப்படங்களை இருவரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் சமீபத்தில் இன்ஸ்டாகிராம்-க்கு என்ட்ரி ஆன நயன்தாரா தனது குழந்தைகளின் வீடியோவை முதல் வீடியோவாக பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், விக்கி – நயன் இருவரும் தங்களது குழந்தைகளின் முதல் பிறந்த நாளை முன்னிட்டு அவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 'என் முகக் கொண்ட என் உயிர்... என் குணம் கொண்ட என் உலகம்... இந்தப் பாடல் வரிகளையும் எங்கள் படங்களையும் ஒன்றாகப் பதிவிட நீண்ட நாட்களாக காத்திருக்கிறேன்... என் அன்பு மகன்களே. அப்பாவும் அம்மாவும் வார்த்தைகளால் விளக்க முடியாத அளவுக்கு உங்களை நேசிக்கிறார்கள்.
இந்த வாழ்க்கையில் எல்லாவற்றையும் விட எங்கள் வாழ்வில் வந்து மகிழ்ச்சியாக இருந்ததற்கு நன்றி. நீங்கள் அனைத்து நேர்மறை மற்றும் ஆசீர்வாதங்களையும் பெற்று வருகிறீர்கள். இந்த ஒரு வருடம் வாழ்நாள் முழுவதும் கொண்டாட வேண்டிய தருணங்கள் நிறைந்தது. உங்கள் இருவரையும் நேசிக்கிறேன்.
நீங்கள் எங்கள் உலகம். வாழ்க்கைக்கு ஆசீவதிக்கப்பட்டவர்கள் எனக் குறிப்பிட்டு உள்ளார். நயன் மற்றும் விக்கியின் குழந்தைகள் முகத்தைப் பார்த்த மகிழ்ச்சியில் நயன் விக்கி ரசிகர்கள் பலரும் குழந்தைகளுக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“