Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
Screen Logo
பொழுதுபோக்கு

ஹேக் செய்யப்பட்ட எக்ஸ் கணக்கு: நயன்தாரா பதிவு வைரல் ; என்ன நடந்தது?

சமீபத்தில் சமூகவலைதளங்களில் கணக்குகள் தொடங்கிய நயன்தாரா தனது எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Written by WebDesk

சமீபத்தில் சமூகவலைதளங்களில் கணக்குகள் தொடங்கிய நயன்தாரா தனது எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
13 Sep 2024 19:20 IST

Follow Us

New Update
Nayanthara

தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் பிரபலங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களின் சமூகவலைதள கணக்குகள் ஹேக் செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது நயன்தாராவின் ட்விட்டர் அக்கவுண்ட் ஹெக் செய்யப்பட்டுள்ளத்தாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி இருந்த நிலையில், தற்போது தமிழில் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேபோல் அவரது கணவர், விக்னேஷ் சிவன், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கி வருகிறார். இருவரும் திரையுலகில் பிஸியாக நட்சத்திரங்களாக வலம் வரும் நிலையில், தனியாக பிஸினசும் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நயன்தாரா இந்தியாவில், அழகுசாதன பொருட்கள் முதல் சானிட்டரி நாப்கின்கள் வரை பெண்களுக்கு தேவையான பல பொருட்களை விற்பனை செய்து வருகிறார். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய நயன்தாரா, தான் விற்பனை செய்து வரும் பொருட்கள் தொடர்பான விளம்பர படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.  20 வருடங்களாக திரைத்துறையில் இருந்தாலும் சமீபத்தில் தான் நயன்தாரா சமூகவலைதளங்களில் அக்கவுண்ட் தொடங்கினார்.

Account has been hacked. Please ignore any unnecessary or strange tweets being posted.

— Nayanthara✨ (@NayantharaU) September 13, 2024
Advertisment
Advertisements

இந்நிலையில், தற்போது நயன்தாராவின் எக்ஸ் தள கணக்குகள் க்ரிப்டோ விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் 2 பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதன்பிறகு இந்த பதிவுகளை நீக்கிய நயன்தாரா, அவரின் எக்ஸ் கணக்கு மீண்டும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனது எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. புதிதாக எதாவது பதிவுகள் வந்திருந்தால் அதனை பொருட்படுத்த வேண்டாம் என்று பதிவிட்டிருந்தார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Nayanthara

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!