மகனுடன் காதல், அப்பாவுக்கு மனைவி; ஹீரோவின் காதலி, அம்மாவாக ஒரே படத்தில், நடித்த பத்மினி; தமிழ் சினிமா ஷாக்கிங் க்ளைமேக்ஸ்!

ஒரே படத்தில் ஹீரோவுக்கு காதலியாகவும், அம்மாவாகவும் நடித்தவர் தான் நடிகை பத்மினி. எந்த ஹீரோவுக்கு எந்த படத்தில் இவ்வாறு நடித்தார் என்பது தெரியுமா?

ஒரே படத்தில் ஹீரோவுக்கு காதலியாகவும், அம்மாவாகவும் நடித்தவர் தான் நடிகை பத்மினி. எந்த ஹீரோவுக்கு எந்த படத்தில் இவ்வாறு நடித்தார் என்பது தெரியுமா?

author-image
WebDesk
New Update
Natoi

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து நாட்டிய பேரொலி என்று பெயரேடுத்த நடிகை பத்மினி, ஒரு நடிகருக்கு காதலியாகவும், அதே படத்தில் அவரின் அம்மாவாகவும் நடித்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

Advertisment

தமிழ் சினிமாவில் 1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தான் சிவாஜி. முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இவர், தனது நடிப்பிலும் முத்திரை பதித்திருந்தார். இந்த படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து, பல தயாரிப்பாளர்கள் சிவாஜியை வைத்து படம் இயக்க வரிசைகட்டி காத்திருந்தனர். தொடர்ந்து, சிவாஜி 2-வது படமாக நடித்தது தான் பணம். என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் முதல் முறையாக சிவாஜி – பத்மினி ஜோடி இணைந்து நடித்திருந்தது.

சிவாஜி சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே, பத்மினி 1947-ம் ஆண்டு கன்னிகா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிவிட்டார், பணம் படமும் பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து சிவாஜி பத்மினி ஜோடி அடுத்தடுத்து படங்களில் ஜோடியாக நடிக்க தொடங்கினர். பணம் படத்தில், நடித்தபோது சிவாஜிக்கு திருமணம், அன்றைய தினம், முதலில் தாளி கட்டியது பத்மினிக்கு தான். படத்தில் காட்சியில் பத்மினிக்கு தாளி கட்டிய சிவாஜி, அடுத்து தனது மனைவி கமலாவுக்கு ரியாலாக தாளி கட்டியுள்ளார்.

Sivaji Ethirparathathu Padmini

Advertisment
Advertisements

இது குறித்து பத்மினியே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதேபோல் எதிர்பாராதது படத்தில், அவருக்கு சித்தியாகவும் நடித்துள்ளார். 1954-ம் ஆண்டு சி.வி.ஸ்ரீதர் கதையில் உருவான இந்த படத்தை நாராயணமூர்த்தி என்பவர் இயக்கியிருந்தார், சிவாஜி, பத்மினி, நாகையாக, அசோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தின் முதல் பாதியில், சிவாஜியும் பத்மினியும் காதலர்களாக வருவார்கள். இடையில் சிவாஜி மேல் படிப்புக்காக வெளிநாடு செல்லும்போது அவர் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகிவிடும்.

இந்த விபத்தில் சிவாஜி இறந்துவிட்டார் என்று கருதிய பத்மினி, தனது அப்பாவின் பேச்சை தட்ட முடியாமல், சிவாஜியின் அப்பாவை திருமணம் செய்துகொள்வார். ஆனால் விமான விபத்தில் தப்பிக்கும் சிவாஜி கண்பார்வை இல்லாமல் வாழ்வார். தான் கட்டிய மனைவி தனது மகனின் காதலி என்று தெரிந்தவுடன், குற்ற உணர்ச்சியில், பத்மின் தனது வாழ்க்கையை சரியான பாதையில் அமைத்துக்கொள்ளலாம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் இருந்து சென்றுவிடுவார். ஒரு கட்டத்தில் கண் பார்வை பெறும் சிவாஜி இந்த உண்மையை அறிந்துகொள்கிறார்.

தனது கணவரின் மகன் தான் சிவாஜி என்பதை உணரும் பத்மினி, மறுமணம் செய்துகொள்ள மனம் இல்லாமல், சிவாஜிக்கு தாயாக வாழ முடிவு செய்கிறாள். சிவாஜியும் பத்மினியை தாயாக ஏற்றுக்கொண்டு மீண்டும் வெளிநாட்டுக்கு படிக்க போவதுடன் படம் முடிகிறது. படத்தின் முதல் பாதியில் காதலர்களாக இருந்தவர்கள், இறுதியில் அம்மா மகனாக மாறிவிடுகிறார்கள்.  சிவாஜி – பத்மினி நடிப்பு பலரின் பாராட்டுக்களை குறிப்பிடத்தக்கது.

Tamil Cinema News tamil cinema actress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: