ஆந்திர மாநில அமைச்சரும் முன்னாள் நடிகையுமான ரோஜா குறித்து சர்ச்சை கருத்துகள் பரவியுள்ள நிலையில், நடிகைகள் பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ராதிகா தற்போது வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
90-களில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரோஜா. முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்துகொண்டு ஆந்திராவில் செட்டில் ஆகிவிட்டார். மேலும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ரோஜா ஆந்திர சட்டசபையின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
எதிர்கட்சியனர் குறித்து அவ்வப்போது கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வந்த ரோஜா, ஆபாச படத்தில் நடித்துள்ளார் என்று கூறி சில சீடிக்கள் ஆந்திர சட்டபையில், தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் காட்டப்பட்டுள்ளது. இது குறித்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி ரோஜாவை கடுமையாக விமர்சனம் செய்து கருத்துக்களை கூறியிருந்தார்.
இந்த சம்பவம் தென்னிந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இது குறித்து ரோஜா கண்ணீருடன் வெளியிட்டிருந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவியது. நான் ஆபாச நடிகை என்று கூறி சித்திரவதை செய்கிறார்கள். சட்டபயைில் சீடிக்கள் காட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த சீடியில் இருப்பது நான் என்று நிரூபிக்கப்படவில்லை. பெண்கள் விருப்பத்துடன் வாழ வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. என் குணத்தை மதிப்பிட நீங்கள் யார்?
தெலுங்கு தேசம் கட்சி பெண்களை விளையாட்டு பொருளாக நடத்துகிறது. உங்கள் வீட்டு பெண்களை இப்படி பேசினால் ஏற்றுக்கொள்வீர்களா? ஒரு திரை பிரபலத்தால் நிருவப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியில், பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி பேசியதற்கு அவரது மனைவியே அவரை அறைந்திருக்க வேண்டும். தப்பை கேள்வி கேட்டால் என்னை தாக்கி பேசுவார்களா? தெலுங்கு தேசம் கட்சியில் பெண்களுக்கு மரியாதை இல்லை. பண்டாரு சத்தியநாராயண மூர்த்தி மீது நான் மான நஷ்ட மூர்த்தி தொடர்வேன் என்று கூறி இருந்தார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து நடிகைள் பலரும் ரோஜாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தெலுங்கு தேசம் கட்சியை வெளுத்து வாங்கும் வகையில் நடிகை ராதிகா வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு நடிகையாக தோழியாக அரசியல்வாதியாக ரோஜாவின் தைரியம் எனக்கு நன்றாகவே தெரியும். பெண்கள் அரசியலிலும் ஒரு அங்கமாக இருக்கின்றார்கள்.
பெண்களை பாரத மாதாவாக பார்க்கும் நம் நாட்டில் நடிகை ரோஜா மீதான அவதூறான விமர்சனங்கள் வந்திருப்பதை நினைத்தால் கேவலமாக இருக்கிறது. ஒரு அமைச்சரை ஆபாச படத்தில் நடித்தவர் என்றும் அவர் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் விமர்சிக்க யாருக்கும் எந்த தகுதியும் கிடையாது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு பெண்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று ஆவேசமாக பேசியிருக்கிறார். இந்த பதிவுக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“