90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த ரம்பா, வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட நிலையில், தற்போது அவர் தனது குடும்பத்துடன் தளபதி விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
90-களின் தொடக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ரம்பா. 1992-ல் தெலுங்கில் வெளியான ஆ வொக்கட்டே அடக்கு என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். பல தெலுங்கு படங்களில் நடித்த ரம்பா 1993-ம் ஆண்டு தமிழில் பிரபு நடித்த உழவன் படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்து கார்த்திக்கின் உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து செங்கோட்டை, சுந்தரபுருஷன், தர்மசக்கரம், ராசி, உனக்காக எல்லாம் உனக்காக என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள ரம்பா, முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். கடைசியாக கடந்த 2010-ம் ஆண்டு பெண் சிங்கம் என்ற படத்தில் நடித்த ரம்பா தமிழ் தெலுங்கு மட்டுமல்லாமல், இந்தி, கன்னடா, மலையாளம், பெங்காலி, பேஜ்பூரி, ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.
மேலும், மானாட மயிலாட, ஜோடி நம்பர் 1 என ஒரு சில டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றுள்ள ரம்பா, கடந்த 2010-ம் ஆண்டு இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் என்பதை திருமணம் செய்துகொண்டார். தற்போது டொரண்டோவில் செட்டில் ஆகிவிட்ட ரம்பா, சமூகவளைதங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருவது வழக்கம்.
அவ்வப்போது யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வரும் நடிகை ரம்பா தற்போது தனது குடும்பத்துடன் நடிகர் விஜயை சந்தித்துள்ளார். இதில் ரம்பாவின் மகனை தூக்கி கொஞ்சுவது போன்று போஸ் கொடுத்துள்ளார் விஜய். அதேபோல் ரம்யா குடும்பத்துடன் போட்டோ, ரம்பாவுடன் தனியாக செல்பி என பல புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகர் ரம்பா பல வருடங்களுக்கு பிறகு உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், விஜய் ரம்பா இணைந்து நடித்த மின்சார கண்ணா படத்தில் வரும் ஊதா ஊதா ஊதாப்பூ என்ற பாடலை வைத்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“