/tamil-ie/media/media_files/uploads/2022/12/Rashmika-Mandannas-latest-Instagram-post.jpg)
நேஷ்னல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனாவின் மேனேஜர் அவரிடம் ரூ80 லட்சம் மோசடி செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னடத்தில் வெளியான கிருக்கி பார்ட்டி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான ராஷ்மிகா மந்ததனா தொடர்ந்து தெலுங்கு படத்தில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். தெலுங்கில் இவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், புஷ்பா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வசூலிலும் சாதனை படைத்தது.
அதனைத் தொடர்ந்து தமிழில் கார்த்தியின் சுல்தான், விஜயின் வாரிசு உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழில் நடித்த இவர், ஹேஷ்னர் க்ரஷ் என்று அழைக்கப்பட்டார். இளம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் ராஷ்மிகா தற்போது பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் தற்போது அர்ஜூன் ரெட்டி இயக்குனர் சந்தீ்ப் வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிக்கும் அனிமல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து புஷ்பா படத்தின் 2-ம் பாகத்தில் அல்லு அர்ஜூனுடன் நடித்து வருகிறார். தமிழிலும் சில படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா தற்போது நடிப்பில் பிஸியாக இருந்து வரும் நிலையில், அவரது மேனேஜர் அவரிடம் ரூ80 லட்சம் மோசடி செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோசடி சம்பவத்தை கண்டுபிடித்த ராஷ்மிகா அவரது மேனேஜரை வேலையில் இருந்து நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனாலும் இந்திய சினிமாவின் முன்னணி நடிகை நேஷ்னல் க்ரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனாவின் மேனேஜர் மோசடி செய்த சம்பவம் திரைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராஷ்மிகா திரைத்துறைக்கு வந்தத்தில் இருந்து அவருக்கு மேனேஜராக இவர் தான் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.