/indian-express-tamil/media/media_files/5JRsxniloSSbzQYpwhmk.jpg)
நடிகை ராஷ்மிகா மந்தனா
நான் தானாக கதைகளை தேடி போவதில்லை. என்னிடம் வரும் கதைகளை பார்த்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறேன் என்று இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
கன்னடத்தில் வெளியாகி கிர்க்கி பார்ட்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தா தொடர்ந்து தெலங்கில் பல வெற்றிப்படங்களில் நடித்து குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக உச்சம் தொட்டார். தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்திருந்த ராஷ்மிகா, கடந்த ஆண்டு வெளியான விஜயின் வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் நான் விஜயின் தீவிர ரசிகை என்பதால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று ராஷ்மிகா வெளிப்படையாக பேசியிருந்தார். தற்போது அர்ஜூன் ரெட்டி படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இந்தியில் இயக்கியுள்ள அனிமல் என்ற படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து இந்தி படங்களில் கவனம் செலுத்தி வரும் ராஷ்மிகா மந்தனா, அனிமல் படத்தில் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதில் சென்னையில் நடைபெற்ற அனிமல் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராஷ்மிகா மந்தனா, நான் நடித்ததில் மிகவும் அழுத்தமான கேரக்டர் இந்த படம் தான். தமிழ் தெலுங்கு இந்தி திரைப்படங்களுக்கு இடையில் பெரிய வித்தியாசம் இல்லை
அதேபோல் பெரிய நடிகர்களின் படங்களில் நான் நடிப்பது எந்த ரகசியமும் இல்லை. நானும் கதைகளை தேடி போவதில்லை. என்னிடம் வரும் கதைகளில் சிறந்ததை தேர்வு செய்து நடித்து வருகிறேன் மற்றவை இயக்குனர் கையில் தான் இருக்கிறது. நான் நடிகை ஆவேன் என்று நினைககவில்லை. பெரிய நடிகர்களுடன் இந்த மேடையில் அமர்ந்திருப்பதே எனக்கு பெருமை என்றும் ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.