/indian-express-tamil/media/media_files/2025/09/22/sai-pallavi-2025-09-22-22-09-44.jpg)
திரைப்படங்களில் ஹோம்லி லுக்கில் நடித்து இல்லத்தரசிகளின் நன்மதிப்பை பெற்றிருந்த நடிகை சாய் பல்லவி சமீபத்தில் நீச்சல் உடையுடன் தனது தங்கையுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சாய் பல்லவி குறித்து இவ்வளவு கமெண்டஸ்கள் வர காரணம் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.
தமிழில் கஸ்தூரிமான், தாம் தூம் உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்தவர் சாய் பல்லவி. 2009-ம் ஆண்டு தெலுங்கில் இ.டிவியின் அன்லிமிட்டெட் டான்ஸ் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்று கவனம் பெற்றார். 2015-ம் ஆண்டு வெளியான பிரேமம் என்ற மலையாளப்படம் சாய் பல்லவிக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. பிரேமம் படத்தில் அவர் நடித்த மலர் கேரக்டர் கேரளா மட்டுமல்லாமல் தமிழகத்திலும் பெரும் வரவேற்பை பெற்றது.
நடனத்தில் அதீத ஈடுபாடு கொண்ட சாய் பல்லவி, நடன தளத்தை எப்படி சிறப்பாக கையாள வேண்டும் என்ற வித்தை தெரிந்தவர்.நடனத்தில் அவர் முறையாக பயிற்சி பெறவில்லை என்றாலும் கூட, ஒரு கைதேர்ந்த நடன கலைஞர் போல அசத்தக்கூடியவர் சாய் பல்லவி. முன்னணி நடிகர்களுடன் இணைந்த பல வெற்றப்படங்களை கொடுத்துள்ள சாய் பல்லவி, தெலுங்கில் ஷியாம்சிங்க ராய், தண்டேல், ஃபடா, தமிழில் அமரன் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார்.
அதேபோல் தனது படங்களில் கிளாமர் காட்டாமல் நடிக்கும் நடிகை என்று பெயரேடுத்த சாய் பல்லவிக்கு தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. தற்போது பாலிவுட்டில் ராமாயனம் படத்தில் நடித்து வரும் சாய் பல்லவி, தனது தங்கையுடன் எடுத்துக்கொண்ட புகைப்பங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், ஹோம்லி லுக்கில் தான் இருப்பேன், க்ளாமர் உடை அணிந்து படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொன்னவர் இப்போது ஏன் இப்படி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் என்று கேட்டு வருகின்றனர்.
அதேபோல் இதுவரை க்ளாமர் காட்டாத சாய் பல்லவி தனது விதிமுறைகளை கொஞ்சம் தளர்த்தியுள்ளார் என்றும் கூறி வரும் நிலையில், கடற்கரைக்கு சேலை கட்டி செல்ல முடியாது. அவர் என்ன உடை அணிய வேண்டும் என்று நீங்கள் எப்படி முடிவு செய்ய முடியும்? இது அவரின் சுதந்திரம் என்று ஒரு தரப்பினர் சாய் பல்லவிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே காஷ்மீர் ஃபைல்ஸ் படம் வெளியானபோது அது தொடர்பாகவும், காஷ்மீர் பண்டிட்களின் கொலையும், மாட்டு தீவிரவாதம் காரணமாக முஸ்லீம்கள் கொலை செய்யப்பட்ட சம்பவமும் ஒரே மாதிரியானது என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.