சூர்யாவுக்கு மருமகள், இவர் நடித்த படம் 20 ஆண்டுகள் கழித்து ரிலீஸ் ஆனது; விவேக் திரையில் விரும்பிய பெண்: யார் இந்த நடிகை?

தமிழில் மொத்தமாக 4 படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும், இவர் நடித்த ஒரு படம் 2004-ல் படமாக்கப்பட்டு 20 வருடங்கள் கழித்து 2024-ல் வெளியாகியுள்ளது.

தமிழில் மொத்தமாக 4 படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும், இவர் நடித்த ஒரு படம் 2004-ல் படமாக்கப்பட்டு 20 வருடங்கள் கழித்து 2024-ல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil Cinema Actress Sameera

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும், ரசிகர்கள் மனதில் ஸ்டாரங்காக இடம் பிடித்த நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அவர்களின் முதல் படம் பெரிய வெற்றியடைந்தால், அந்த படம் அவர்களுக்கு மட்டும் அல்ல, அவரது ரசிகர்களுக்கும் என்றும் நினைவில் இருக்கும் படமாக இருக்கும். அந்த வரிசையில், தமிழில் முதல் படமே சூர்யாவுடன் நடித்த நடிகை இப்போது சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை கவனித்து வருகிறார்.

Advertisment

அந்த நடிகை வேறு யாரும் இல்லை சமீரா ரெட்டி தான். 2002-ம் ஆண்டு மெய்னி தில் துச்கொ தியா என்ற இந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், அடுத்து, 2005-ம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆர் நடித்த நரசிம்மஹாடு என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இங்கிலீஷ், தெலுங்கு, இந்தி, பெங்காலி என மாறி மாறி நடித்து வந்த சமீரா, 2008-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் கவுதம்மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Tamil Cinema Actress Sameera1

இந்த படத்தில் சூர்யா 2 வேடங்களில் நடித்திருந்த நிலையில், அப்பா சூர்யாவுக்கு சிம்ரனும், மகன் சூர்யாவுக்கு, சமீராவும் ஜோடியாக நடித்திருந்தனர். ஆனால் இவர் படத்தில் பாதியில் இறந்து விடுவது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகவும், அவருக்கு மருமகளாகவும் நடித்திருந்த இவருக்கு வாரணம் ஆயிரம் படம் பெரிய வெற்றியை கொடுத்தது. ஆனாலும் அடுத்த தமிழில் அவருக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை. 3 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் 201-ம் ஆண்டு நடுநிசி நாய்கள் படத்தில் நடித்தார்.

Advertisment
Advertisements

அதன்பிறகு விஷாலுடன் வெடி, மாதவன் ஆர்யாவுடன், வேட்டை ஆகிய படங்களில் நடித்திருந்த சமீரா, அதன்பிறகு தமிழில் படங்கள் நடிக்கவில்லை. கடைசியாக 2013-ம் ஆண்டு கன்னடத்தில் வரதநாயகா என்ற படத்தில் நடித்திருந்த இவர். 2014-ம் ஆண்டு அக்ஷை வார்தே என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது 2 குழந்தைகளுக்கு அம்மாவாக குடும்பத்தை பாத்து வரும் சமீரா, 2024-ம் ஆண்டு, வெளியான நாம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2004-ம் ஆண்டு படமாக்கப்பட்டு 20 ஆண்டுகள் கழித்து வெளியாகியுள்ளது.

Sameera Reddy

சமீராவுக்கு சுஷ்மா ரெட்டி, மேக்னா ரெட்டி என இரு சகோதரிகள் உள்ளனர். அதில், ஒருவர் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், ஒருவர் இந்தியில் சில படங்களிலும் நடித்துள்ளனர். சமூகலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சமீரா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இதில் குறிப்பாக தனது குடும்பத்துடன் சமீரா இருக்கும் புகைப்படங்கள் கவனம் ஈர்த்து வருகிறது.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: