பாலக்காடு பக்கத்திலே... பத்மினி கேரக்டரில் நானா? ‘யாரடி நீ மோகினி’ பற்றி மனம் திறந்த சரண்யா மோகன்!

1997-ம் ஆண்டு மாலையளத்தில் வெளியான அனியத்து பரவு என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் சரண்யா மோகன். இந்த படத்தின் ரீமேக்கான வெளியாக விஜயின் காதலுக்கு மரியாதை படத்திலும் நடித்திருந்தார்.

1997-ம் ஆண்டு மாலையளத்தில் வெளியான அனியத்து பரவு என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் சரண்யா மோகன். இந்த படத்தின் ரீமேக்கான வெளியாக விஜயின் காதலுக்கு மரியாதை படத்திலும் நடித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
YNM Dhanush Saranya Mohan

தனுஷ் - சரண்யா மோகன்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். துள்ளுவதே இளமை படம் தொடங்கி காதல் கொண்டேன், புதுப்பேட்டை, திருடா திருடி, பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், தற்போது குபேரா படத்தில் நடித்துள்ளார், இந்த படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Advertisment

குபேரா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை சரண்யா மோகன், யாரடி நீ மோகினி படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைத்தது அந்த படத்தில் பாலக்காட்டு பக்கத்திலே என்ற பாடலுக்கு தனுஷூடன் நடனமாடியது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

1997-ம் ஆண்டு மாலையளத்தில் வெளியான அனியத்து பரவு என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் சரண்யா மோகன். இந்த படத்தின் ரீமேக்கான வெளியாக விஜயின் காதலுக்கு மரியாதை படத்திலும் நடித்திருந்த இவர், அடுத்து, தோஸ்த், ஒருநாள் ஒரு கனவு ஆகிய தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திமாக நடித்திருந்தார். இவர் துணை கேரக்டரில் நடித்திருந்த முதல் படம் தனுஷ் நடிப்பில் வெளியான ‘யாரடி நீ மோகினி திரைப்படம் தான்.

இந்த படத்திற்கான ஆடிஷன் நடக்கும்போது, ஒருவரின் வற்புறுத்தலால் பங்கேற்ற சரண்யா மோகனிடம், இயக்குனர் கஸ்தூரி ராஜா, தாவனி பாவாடை போட்டுக்கொண்டு ஒரு முழம் பூ தலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி வைத்துக்கொண்ட சரண்யா மோகன், கொடுத்த வசனத்தை பேசிவிட்டு வீட்டுக்கு புறப்பட தயாரானபோது, அவரை அழைத்த கஸ்தூரி ராஜா இந்த படத்தில் நடிக்க நீங்கள் தேர்வுவாகிவிட்டீகள் என்று கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

வாய்ப்பு கிடைத்தாலும் சரி கிடைக்காவிட்டாலும் சரி என்று வந்த சரண்யா மோகன், வாய்ப்பு கிடைத்ததை ஆச்சரியமாக பார்த்துள்ளார். அதன்பிறகு படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. யாரடி நீ மோகினி படத்தின் ஒரிஜினலான தெலுங்கு படத்தில், சரண்யா மோகனின் பாடல் காட்சி இல்லாத நிலையில், தமிழ் படத்தில் இந்த பாடல் வேண்டும் என்று இயக்குனர் செல்வராகவன் கேட்டு வாங்கியுள்ளார். இந்த பாடல் சிவாஜி பத்மினி இருவரும் ஆடியது என்று தெரிந்ததும் சரண்யா மோகன் ஷாக் ஆகியுள்ளார்.

அதன்பிறகு அவரே பத்மினியின் நடனத்தை பார்த்து அவரை போலவே ஆடியுள்ளார். 2 நாட்கள் இரவில் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது. படத்தில் எனது கேரக்டர் எப்படி இருக்கும் என்று தெரியாது. ஆனால் படம் வெளியானபோது பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்தது என்று நடிகை நடிகை சரண்யா மோகன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

Dhanush

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: