Advertisment

அழகிய மச்சத்திற்கு உருவான ஆபத்து: சினிமாவையே விடத் துணிந்த சரோஜாதேவி

ஸ்ரீதர் இயக்கிய கல்யாணப்பரிசு படத்தில் நடித்த சரோஜா தேவி, 1961-ம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆரின் திருடாதே படத்தில் இவருடன் ஜோடியாக நடித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
Saroja Devi Eye

சரோஜா தேவி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கர்நாடகாவில் பிறந்த சரோஜா தேவி1955-ம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். நடிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை என்றாலும் தனது அம்மாவுக்காக ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்ட சரோஜா தேவிமகாகவி காளிதாஸ் படத்தில் நடித்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால், அடுத்து ஒரு படத்தில் மட்டும் நடித்துவிடு என்று அவரது அம்மா கூறியுள்ளார்.

Advertisment

அவரின் வார்த்தையை ஏற்றுக்கொண்டு அடுத்து ஒரு படத்தில் நடித்த சரோஜா தேவி, அடுத்து தமிழ் இயக்குனரான கே.சுப்பிரமண்யம், தான் கன்னடத்தில் இயக்க உள்ள கட்ச தேவயானி என்ற படத்தில் சரோஜா தேவி நடிக்க வேண்டும் என்று விருப்பப்பட, அம்மாவின் வற்புறுத்தலால் மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய சரோஜா தேவி அந்த படத்தில் நடித்திருந்தார்.

இந்த படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அடுத்தடுத்து சரோஜா தேவிக்கு பட வாய்ப்பும் குவிய தொடங்கியது. அதன்பிறகு தான், தமிழில் திருமணம் படத்தின் மூலம் அறிமுகமான இவர், அடுத்து சிவாஜியின் தங்கமலை ரசகியம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான செங்கோட்டை சிங்கம் படம் தான் சரோஜா தேவி நாயகியாக நடித்த முதல் படம்.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீதர் இயக்கிய கல்யாணப்பரிசு படத்தில் நடித்த சரோஜா தேவி, 1961-ம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆரின் திருடாதே படத்தில் இவருடன் ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு எம்.ஜி.ஆருடன் நாடோடி மன்னன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த, சரோஜா தேவி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த நிலையில், அவர் சினிமாவுக்கு வந்த புதிதில் அவர் கண்ணில் ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

1955-ம் ஆண்டு வெளியான சரோஜா தேவி அறிமுகான மகாகவி காளிதாஸ் என்ற படத்தில் நடிப்பதற்காக போட்டோஷூட் எடுத்துள்ளனர். அப்போது சரோஜா தேவியின் கண்ணில் ஒரு மச்சம் இருப்பதை கவனித்த உதவி இயக்குனர் ஒருவர், உங்கள் கண்ணில் மச்சம் இருக்கிறது அதை எடுக்க வேண்டும். அதற்காக ஆப்ரேஷன் செய்யப்போகிறோம் என்று கூறியுள்ளார். இதனால் பயந்துபோன சரோஜா தேவி, இந்த படமே வேண்டாம் நாம் போய்விடலாம் என்று தனது அம்மாவிடம் கூறியுள்ளார்.

இதை கேட்டுக்கொண்ட சரோஜா தேவியின் அம்மா, அந்த படத்தின் இயக்குனரான கே.ஆர்.சீதாராம சாஸ்திரியை சந்தித்து இது குறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர், அப்படியெல்லம் எதுவும் இல்லம்மா. உன்ன கலாட்ட பண்றதுக்காக சொல்லிருக்காங்க. உன் கண்ணில் இருக்கும் இந்த மச்சம் உனக்கு ரொம்ப அதிஷ்டமானது.  நீ பெரிய ஸ்டாரா வரப்போற என்று வாழ்த்துக்கள் கூறியுள்ளார். இதை சரோஜா தேவி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

saroja devi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment