Advertisment

இயக்குனர் மகள் சிபாரிசு... உதவி இயக்குனர் கொடுத்த நம்பிக்கை : சரோஜா தேவி தமிழில் அறிமுகமானது இப்படித்தான்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த சரோஜா தேவி, தமிழ் சினிமாவில் எப்படி அறிமுகமானார் தெரியுமா?

author-image
WebDesk
New Update
Saroja Devi Classic

சரோஜா தேவி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் – சிவாஜி ஆகிய இருவருடனும் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள கன்னடத்து பைங்கிளி என்று அழைக்கப்படும் சரோஜா தேவியை தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் யார் தெரியுமா?

Advertisment

கர்நாடகாவில் பிறந்த சரோஜா தேவி1955-ம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். நடிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை என்றாலும் தனது அம்மாவுக்காக ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்ட சரோஜா தேவிமகாகவி காளிதாஸ் படத்தில் நடித்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால், அடுத்து ஒரு படத்தில் மட்டும் நடித்துவிடு என்று அவரது அம்மா கூறியுள்ளார்.

அதன்பிறகு தமிழ் இயக்குனரான கே.சுப்பிரமண்யம், தான் கன்னடத்தில் இயக்க உள்ள கட்ச தேவயானி என்ற படத்தில் சரோஜா தேவி நடிக்க வேண்டும் என்று விருப்பப்பட, அம்மாவின் வற்புறுத்தலால் மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய சரோஜா தேவி அந்த படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அடுத்தடுத்து சரோஜா தேவிக்கு பட வாய்ப்பும் குவிய தொடங்கியது.

இந்த காலக்கட்டத்தில் தமிழில் எம்.ஜி.ஆர் நடிப்பில் ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்த சின்ன அண்ணாமலை அதற்காக நாயகியை தேடிக்கொண்டு இருந்துள்ளார். இந்த படத்தில் நடிக்கும் எம்.ஜி.ஆர், அப்போது பல படங்களில் நடித்துக்கொண்டு இருந்ததால், தினமும் மாலையில் கால்ஷீட் கொடுப்பதாகவும், புதுமுகத்தை நாயகியாக போடுமாறும் கூறியதால், புதுமுக நாயகிக்காக தேடி அலைந்துள்ளார்.

அந்த நேரத்தில் சிவாஜியின் தங்கமலை ரகசியம் படத்திற்காக, கதை எழுதிய சின்ன அண்ணாமலை, படத்தின் தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒருநாள் கடற்கரை பக்கம் சென்ற, சின்ன அண்ணாமலை, இயக்குனர் கே.சுப்பிரமண்யம் மகள் பத்மா சுப்பிரமண்யத்தை சந்தித்து, தங்கமலை ரகசியம் படம் பற்றி சொல்ல, அவரோ தனது தோழி என்று ஒரு பெண்ணை அறிமுகம் செய்து வைத்து கன்னடத்தில் சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

இதனை கேட்டுக்கொண்ட சின்ன அண்ணாமலை, தங்கமலை ரகசியம் படத்தில் அந்த பெண்ணை ஒரு டான்ராக சேர்த்துக்கொள்கிறார். அந்த பெண் படப்பிடிப்புக்காக மேக்கப் போட்டுக்கொண்டு வந்தபோது, அவரை கேமரா வழியாக பார்த்த இயக்குனர் பா.நீலகண்டன், இந்த பெண் மிகவும் அழகாக இருக்கிறார். பெரிய நடிகையாக வருவார். நீ ஒரு படம் அல்ல 3 படத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்துகொள் என்று சின்ன அண்ணாமலையிடம் கூறியுள்ளார்.

அதன்பிறகு அந்த காட்சியை படமாக்கிய படக்குழுவினர், காட்சி எப்படி வந்துள்ளது என்பது குறித்து தியேட்டரில் பார்த்தபோது சரோஜா தேவியை பார்த்து பிரமித்து போயுள்ளனர். அதன்பிறகு அவரை 3 திரைப்படங்களுக்கு ஒப்பந்தம் செய்த சின்ன அண்ணாமலை, எம்.ஜ.ஆர் நடிப்பில் தான் தயாரிக்க உள்ள படத்திற்கும் நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த படம் தான் திருடாதே. படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் நடைபெற்றபோது எம்.ஜி.ஆருக்கு விபத்து ஏற்பட்டதால் படப்பிப்பு நிறுத்தப்பட்டது.

3 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் மீண்டும் திருடாதே படத்தின் படப்பிடிப்பு தொடங்கியபோது, சரோஜா தேவி முன்னணி நாயகியாக வலம் வந்துகொண்டிருந்தார். 1961-ம் ஆண்டு வெளியான திருடாதே படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mgr saroja devi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment