'நீ ஏன் என்னை கல்யாணம் பண்ண மாட்டேங்கிற..?' ஒற்றை வசனத்தில் சரோஜா தேவியை மயக்கிய சிவாஜி கணேசன்

பல வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் நடைபெற்ற நடிகர் சிவாஜி கணேசனுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சரோஜா தேவி பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.

பல வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் நடைபெற்ற நடிகர் சிவாஜி கணேசனுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சரோஜா தேவி பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sivaji Saroja

சிவாஜி கணேசன் - சரோஜா தேவி

சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பழம்பெரும் நடிகை சரோஜா தேவி சிவாஜி கணேசன் தன்னிடம் கேட்ட கேள்வி குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகைகளில் முக்கியமானவர் சரோஜா தேவி. எம்.ஜி.ஆர். சிவாஜி தொடங்கி இன்றைய காலக்கட்ட நடிகர்களான விஜய் சூர்யா உட்பட பல நடிகர்கள் படங்களில் நடித்துள்ள சரோஜா தேவி 1956-ம் ஆண்டு வெளியான திருமணம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். கடைசியாக தமிழில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான சூர்யாவின் ஆதவன் படத்தில் நடித்திருந்தார்.

இதனிடையே பல வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் நடைபெற்ற நடிகர் சிவாஜி கணேசனுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சரோஜா தேவி, நானும், சிவாஜி கணேசனும் பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்திருக்கிறோம். அந்த படங்களில் என் நடிப்பு சிறப்பாக இருந்தது என்றால் அதற்கு காரணம் நடிகர் திலகம் தான். அவரின் இருவர் உள்ளம் படத்தில் ஒரு ப்ளே பாயாக நடித்திருப்பார்.

அதில் ஒரு காட்சியில் என்னை பார்த்து எனக்கென்ன படிப்பில்லையா? பணமில்லையா, அழகில்லையா நீ ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்குற என்று கேட்டார். அவர் கேட்ட அந்த ஸ்டைலில் மயங்கி நான் என் டைலாக்கை மறந்துவிட்டேன். அதன் பிறகு ஒரு ரீடேக் ஆச்சு, அடுத்து 2-வது ரீடேக் ஆனதும் நான் அழ ஆரம்பித்துவிட்டேன்.  நான் அழுதா நிறுத்த மாட்டேன் என்று நடிகர் திலகத்திற்கு தெரியும்.

Advertisment
Advertisements

அதனால் அவர் சரோஜா நல்லதான் நடிச்சா நீதான் சரியா படம் பிடிக்கல என்று கூறி கேமரா மேனையைம் லைட் மேனையும் சத்தம்போட்டார். அதன்பிறகு என்னை தேற்றி மீண்டும் ஒரு டேக் எடுத்தார்கள் நான் அப்போது நீ மன்மதனாக இருக்கலாம். பணத்தில் குபேரனாக இருக்கலாம். படிப்பில் மேதையாக இருக்கலாம். இந்த மூன்றையம் காக்க கூடிய கண்ணியம் உள்ளிடத்தில் இல்லை இந்த டைலாக்கை சொன்னேன். இந்த டைலாக்கை சொன்னவுடன் அவர் என்னை பாராட்டினார் என கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sivaji Ganesan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: