பசங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை செந்தில் குமாரி. இந்த படத்தில் இவரின் நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது. தொடர்ந்து விஷாலுடன் தோரணை, எத்தன், சிம்புவுடன், ஒஸ்தி, கோலிசோடா மெர்சல், கடைக்குட்டி சிங்கம் சுல்தான், மண்டேலா ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் சின்னத்திரையில் கால்பதித்த அவர், தொடர்ந்து சரவணன் மீனாட்சி தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
Advertisment
தற்போது விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா மற்றும் சன்டியின் வாணத்தை போல ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். இதில் பாரதி கண்ணம்மா தொடரில் நாயகியின் சித்தியாக நெகட்டீவ் ரோலில் நடித்த இவர், தற்போது பாசிட்டீவாக மாறியுள்ளது போன்று கத அமைக்கப்பட்டுள்ளது. சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிஸியாக நடித்து வரும் செந்தில்குமாரி இடையில் டப்பிங் கலைஞராகவும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
கிராமத்து பெண் கதாபாத்திரங்களுக்கு கட்சிதமாக பொருந்தும் வகையில் குரல்வளம் பெற்றுள்ள இவர், பல படங்களில் நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார்.. அந்த வகையில் விஷால் பெண் வேடமிட்டு நடித்த 'அவன் இவன்' படத்தில் அவருக்கு செந்தில்குமாரி குரல் கொடுத்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த படத்தில் விஷால் பெண் வேடமிட்டு நாயகியின் வீட்டிற்கு திருட செல்லும் காட்சி பெரும் பிரபலம். இதில் அவர் பேசும் வசனங்களும் ரசகர்கள் மத்தியில் சிறப்பாக வரவேற்பை பெற்றது.
Advertisment
Advertisements
இந்த காட்சியில் விஷாலுக்கு செந்தில்குமாரி தான் டப்பிங் பேசியுள்ளார். அந்த காட்சியில் காமெடியாகவும் எதார்த்தமாகவும் பேசிய செந்தில்குமாரியின் குரல் அந்த காட்சிக்கு பலம் சேர்த்த்து என்றே கூறலாம். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் இந்த காட்சியை தேடி பார்த்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil