படப்பிடிப்பில் படுக்கை அறை காட்சி; ரகளை செய்த கணவர்: கடைசியில் நடிகை எடுத்த முடிவு என்ன?

படத்தில் ஒரே ஒரு கட்டில் சீன் காட்சியில், அங்கே படுத்திருப்பார், நான் இங்கே படுத்திருப்பேன் முகம் மட்டும் தான் தெரியும் என்று இயக்குனர் சொன்னபோது வேறு வழியே இல்லாமல் நடிக்க ஒத்துக்கொண்டேன்.

படத்தில் ஒரே ஒரு கட்டில் சீன் காட்சியில், அங்கே படுத்திருப்பார், நான் இங்கே படுத்திருப்பேன் முகம் மட்டும் தான் தெரியும் என்று இயக்குனர் சொன்னபோது வேறு வழியே இல்லாமல் நடிக்க ஒத்துக்கொண்டேன்.

author-image
WebDesk
New Update
Senthilkumari actress

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகானவர் நடிகை செந்தில்குமாரி. மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர் தங்கை நடிகை மீனாள் மூலமாக சினிமாவில் அறிமுகமான நிலையில், தற்போது, அம்மா, அண்ணி, வில்லி உள்ளிட்ட முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார். கடைக்குட்டி சிங்கம், சுல்தான், களவாணி 2ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Advertisment

கனா காணும் காலங்கள் தொடரில் டீச்சராக நடித்திருந்தார். ஆனால் அப்போது பிரபலமாகாத இவர், விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீசன்3 –ல் தெய்வானை கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றார். நடிப்பை தாண்டி குரலில் வளம் பெற்ற செந்தில்குமாரி, கிராமத்து பின்னணி கொண்ட திரைப்படங்களில் டப்பிங் பேசியுள்ளார். மேலும் அவன் இவன் படத்தில் விஷாலுக்கும் குரல் கொடுத்துள்ளார். 

இதனிடையே சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது வாழ்க்கை குறித்து நடிகை செந்தில்குமாரி மனம் திறந்து பேசியுள்ளார். நான் சினிமாவில் நடிக்க வரும் போதே என்னுடைய கணவர், அம்மா, அக்கா போன்ற கதாபாத்திரத்தில் தான் நடிக்க வேண்டும். எந்த நடிகருடனும் நெருக்கமாகவோ கையை பிடித்துக் கொண்டு, காலை பிடித்துக் கொண்டோ நடிப்பதாக இருந்தால், நீ சினிமாவில் நடிக்கவே வேண்டாம் என்று சொல்லிவிட்டார். 

அவர் சொன்ன, அனைத்திற்கும் சம்மதம் சொல்லிவிட்டு தான், சினிமாவில் நடிக்க வந்தேன். அவர் சொன்னபடியே நடித்துக்கொண்டு இருந்த நான், திட்டக்குடி என்ற படத்தில் ஒரே ஒரு கட்டில் சீன் காட்சியில், அங்கே படுத்திருப்பார், நான் இங்கே படுத்திருப்பேன் முகம் மட்டும் தான் தெரியும் என்று இயக்குனர் சொன்னபோது வேறு வழியே இல்லாமல் நடிக்க ஒத்துக்கொண்டேன். என்னுடைய கணவர் அந்த காட்சியை பார்த்துவிட்டு அதில் நடிக்க கூடாது என்று பெரிய பிரச்சினை செய்து விட்டார். 

Advertisment
Advertisements

இப்போதே வீட்டுக்கு வார, வரியா இல்லையா என்று கேட்டு பிரச்னை செய்ய, நான் எவ்வளவு சமாதானம் சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை. கடைசியில் நான் முடித்துவிட்டு தான் வருவேன் என்று சொன்னதால், படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் இருந்ததால் அவர் அமைதியாக சென்றுவிட்டார். அந்த காட்சி முடிந்தவுடன் மீண்டும் என்னை வீட்டுக்கு அழைத்தார். ஆனால் 2 நாள் நடித்துவிட்டு வருகிறேன் என்று நான் சொன்னேன். படப்பிடிப்பு தளத்தில் அப்படியே என்னை விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

ஹோட்டலுக்கு வந்து பார்த்தபோது அவர் அறையை காலி செய்திருந்தார். ஹோட்டல் நிர்வாகத்தில் இருந்து எனக்கு போன் செய்து உங்க கணவர் சண்டை போட்டதால் அறையை காலி செய்யுங்கள் என்று சொன்னார்கள். நான் இது பற்றி இயக்குனரிடம் சொன்னபோது, ஹோட்டலில் அப்படி சொல்ல வாய்ப்பே இல்லையே என்று அவர் சொன்னார். அதன்பிறகு தான், பேசியது என் கணவர் என்பது தெரிந்தது. அதன்பிறகு பலரும் அவரை சமாதானம் செய்தனர். அன்றிலிருந்து என் கணவர், என்னுடைய படங்களை பார்ப்பதை நிறுத்திவிட்டார். என்று நடிகை செந்தில்குமாரி கூறியுள்ளார். 

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: