/indian-express-tamil/media/media_files/KFKaEbTSEOZqCJaDwZgw.jpg)
கவுண்டமணி
பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது கவுண்டமணி கொடுத்த ஒரு போதை டேட்ஸ் காரணமாக தங்களால் அந்த பாடலில் டான்ஸ் ஆடவே முடியவில்லை என்று நடிகை ஷகீலா உரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
1997-ம் ஆண்டு கே.சுபாஷ் இயக்கத்தில் வெளியான படம் நேசம். அஜித் மகேஷ்வரி இணைந்து நடித்த இந்த படத்தில், மணிவண்ணன், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு தேவா இசையமைக்க அனைத்து பாடல்களையும் பழனிபாரதி எழுதியிருந்தார். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், பாடல்களும் ஹிட் அடித்தது.
அந்த வகையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘’நட்சத்திர பங்களா நிக்காதடி சிங்கிளா’’ என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் ஒரு பாடலாக நிலைத்திருக்கிறது. மேலும் இந்த படலில் ஜோதி லட்சுமி, ஜோதி மீனா, ஷகீலா உள்ளிட்ட பலர் நடனமாடியுள்ளனர். இந்த பாடல் காட்சி படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யமான அனுபவத்தை நடிகை ஷகீலா பகிர்ந்கொண்டுள்ளார்.
படத்தின் பாடல் காட்சி படமாக்குவற்கு முன்பு, கவுண்டமணி சார் என்னை அழைத்து பேரிட்சம்பழத்தை கொடுத்து ஜோதி மீனாவிடம் கொடுக்குமாறு சொன்னார். அவரிடம் கொடுத்தபின் எனக்கும் பேரிட்சம் பழம் கொடுத்தார். அதை சாப்பிட்டு முடித்தவுடன், பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதில் ஒரு காட்சியில் ஒரு இடத்தில் சுற்றி வருவது போன்று படமாக்கினார்கள். அப்போது ஜோதி லட்சுமி அக்கா சரியாக செய்துவிட்டார்.
நானும் ஜோதி மீனாவும் தலை சுற்றல் காரணமாக செய்ய முடியாமல் போனது. இயக்குனர் எங்களை அழைத்து உங்களால் ஏன் இதை பண்ண முடியவில்லை. ஜோதி லட்சுமி சரியா பண்றாங்களே என்று கேட்டுள்ளார். அக்கா பண்ணுவாங்க சார் எங்களால் முடியவில்லை என்று சொன்னோம். அதன்பிறகு தான் தெரிந்தது அது வொயினில் ஊறவைத்த பேரிட்சம் பழம் என்று. அன்று கவுண்டமணி சார் அப்படி செய்துவிட்டார் என்று ஷகீலா கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.