துணிவு கொடுத்து வெற்றியின் மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் அஜித் குடும்பத்துடன் வெளிநாடு சென்றுள்ள நிலையில், அங்கு தனது மனைவி ஷாலினியுடன் அஜித் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் வசூல் மன்னன் என்று அழைக்கப்படும் முக்கிய நடிகர்களில் ஒருவர் அஜித். இவரது படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபீசில் வசூலை ஈட்ட தவறியதில்லை என்ற பெயர் தொடர்ந்து வருகிறது. இதற்கு இவரது ரசிகர்களும் முக்கிய காரணம். அந்த வகையில் சமீபத்தில் வெளியான துணிவு படம் அஜித்துக்கு மற்றொரு வெற்றிப்படமாக அமைந்தது.
அதோடு மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட துணிவு படம் பாக்ஸ் ஆபீசில் பெரிய வசூல் வேட்டை நடத்தியது. இந்த படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் இருக்கும் அஜித்
படத்தின் திரைக்கதை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் அஜித் தற்போது தனது குடும்பத்துடன் துபாய்
முன்னதாக, அவர்கள் ஐரோப்பாவில் சிறிது சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அப்போது ஷாலினி போர்ச்சுகலில் இருந்து அஜித்தின் படத்தைப் வெளியிட்டிருந்தார். அஜித் மற்றும் ஷாலினியுடன் அவர்களது குழந்தைகளான அனுஷ்கா மற்றும் ஆத்விக் ஆகியோரும் இணைந்துள்ளனர். இதனிடையே அஜித் விரைவில் இந்தியாவுக்குத் திரும்புவார் என்றும், அடுத்து மகிழ் திருமேனி இயக்கவுள்ள தனது அடுத்த ஏ.கே.62 படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று அஜித்தின் நெருங்கிய வட்டாரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத்
ஏ.கே.62 முடித்த பிறகு, அஜித் தனது பைக்கில் உலக சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். இந்த சுற்றுப்பயணத்திற்கு ரைட் ஃபார் மியூச்சுவல் ரெஸ்பெக்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/