குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசனில் பங்கேற்று புகழ் பெற்ற நடிகை ஸ்ருத்திகா அர்ஜூன், தற்போது இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நிலையில், அங்கு ஒரு வார்த்தை பேசி மில்லியன் கணக்கான தமிழ் மக்களின் மனதை கவர்ந்துள்ளார்.
சூர்யா நடிப்பில், கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ஸ்ரீ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ருத்திகா அர்ஜூன். அதனைத் தொடர்ந்து ஆல்பம், நள தமயந்தி உள்ளிட்ட நடித்த இவர், கடைசியாக, 2003-ம் ஆண்டு வெளியான தித்திக்குதே படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு சினிமா மற்றும் சின்னத்திரையில், பங்கேற்காத இவர். கடந்த 2022-ம் ஆண்டு விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் பிரபலமானார்.
குக் வித் கோமாளி சீசன் 3 டைட்டில் வின்னரான இவர், ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிலையில், அடுத்தடுத்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கினார். இதனிடையே தற்போது இந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 18-வது சீசனில் போட்டியாளராக ஸ்ருத்திகா அர்ஜூன் களமிறங்கியுள்ளார். இந்நிகழ்ச்சியின் முதல் நாளில் இருந்தே பலரின் கவனத்தை ஈர்த்து வரும் ஸ்ருத்திகா அர்ஜூன், பிக்பாஸ் இந்தி பதிப்பில் நுழைந்துள்ளது தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் காட்டிய அதே குழந்தைத்தனமாக குறும்புத்தனத்தை காட்டி பலரின் கவனத்தை ஈர்த்து வரும் ஸ்ருத்திகா அர்ஜூன், நிகழ்ச்சியில் தமிழில் பேசி பலரின் இதயத்தை வென்றுள்ளார். நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஸ்ருத்திகா அர்ஜூன் அறிமுகத்தின்போது அனைவருக்கும் வணக்கம் என்று சொல்லி வாழ்த்தினார். தற்போது பிக்பாஸ் வீட்டில், கணவன், தாம்பத்திய வாழ்வு குறித்து அரட்டை அடித்துள்ளார்.
இதை பார்த்த பிக்பாஸ் நேற்று, அவர் என்ன பேசுகிறார் என்று கேட்க, ஸ்ருத்திகா அர்ஜூன் "சும்மா" என்ற தமிழ் வார்த்தையில் பதில் அளித்துள்ளார். இதை கேட்டு வீட்டில் இருந்த சக போட்டியாளர்கள் அனைவரும் சிரித்துள்ளனர். ஆனால் பிக் பாஸ் இந்த வார்த்தை குறித்து விளக்கம் கேட்க, சிரித்து முடித்த ஸ்ருத்திகா, "சும்மா" என்றால் "ஃபால்டு (சாதாரண) என்று விளக்கம் கொடுத்தார். அவரது உண்மையான எதிர்வினை மற்றும் போட்டியாளர்களின் சிரிப்பு பார்வையாளர்களுக்கு சிரிப்பை வரவழைத்தது. இதை கேட்ட சக போட்டியாளர்களும் ஸ்ருத்திகாவை கிண்டல் செய்ய தொடங்கினர்.
அந்த வகையில், நடிகர் கரண் வீர் மெஹ்ரா உணர்ச்சிவசப்பட்டு நடிகையை கிண்டல் செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதன்பிறகு அவரை உற்சாகப்படுத்த, கரண் வீர் மெஹ்ரா அவரது கால்களை இழுத்து, “அர்ஜுன் அபி பாங்காக் ஜா ரஹா ஹோகா” என்று கூறியுள்ளார். அதன்பிறகு கணவன் தனது மனைவியை பார்க்கவில்லை என்றால், மற்ற பெண்களுடன் அரட்டையடிப்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று காமெடியாக சொல்ல அனைவரும் சிரித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“