2000-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான இங்கனே ஒரு நிலாபக்ஷி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் சினேகா. தொடர்ந்து தமிழில் என்னவளே படத்தில் மாதவனுக்கு ஜோடியாக அறிமுகமானார்.
Advertisment
அதன் பிறகு ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்மந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, ஏப்ரல் மாதத்தில், வசீகரா, ஜனா, வசூல்ராஜா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
தனுஷூடன் இணைந்து இவர் நடித்த புதுப்பேட்டை படம் நல்ல வரவேற்பை பெற்று இன்றும் பேசப்படும் ஒரு படமாக உள்ளது.
அதேபோல் கமல், விஜய், அஜித் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்ளுடன் சினேகா பல வெற்றிப்படங்கயளை கொடுத்துள்ளார். சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராஃப் படத்தில் சினேகாவின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றது.
அதேபோல் சேரனுடன் இவர் நடித்த பிரிவோம் சந்திப்போம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசு விருதை வென்றிருந்தார். கடைசியாக தமிழில் தனுஷூடன் பட்டாஸ் என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதன்பிறகு சமீபத்தில் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான கிறிஸ்டோபர் என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சினேகாவுக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ளனர்.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சினோக அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
ரசிகர்கள் மத்தியில் புன்னகை அரசி என்று போற்றப்படும் நடிகை சினேகா தனக்கே உரிதான சிரிப்புடன் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news