Advertisment
Presenting Partner
Desktop GIF

கமல்ஹாசன் ரூ 20,000 சம்பளம் வாங்கிய படத்தில் ரஜினிக்கு ரூ 2000: ஸ்ரீதேவி ஃப்ளாஷ்பேக்

தற்போது ஸ்ரீதேவி இல்லை என்றாலும் நாள்தோறும் அவரை பற்றிய தகவல்கள் வந்துகொண்டு இருக்கிறது.

author-image
WebDesk
New Update
Sridevi kamal rajini

கமல்ஹாசன் – ரஜினிகாந்த் – ஸ்ரீதேவி இணைந்து நடித்த ஒரு படத்தில் தங்கள் வாங்கிய சம்பளம் குறித்து நடிகை ஸ்ரீதேவி கூறிய பழைய வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 1976-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான மூன்று முடிச்சு என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாவர் ஸ்ரீதேவி. தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் ஆகிய இருவருடனும், இணைந்து ஒரு சில வெற்றிப்படங்களை கொடுத்த இவர், தெலுங்கு, கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

இவரது கணவர் போனி கபூர் இந்தியில் பெரிய தயாரிப்பாளராக இருக்கும் நிலையில், ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி கபூர் ஆகியோர் நடிகைகளாக வலம் வருகின்றனர். தற்போது ஸ்ரீதேவி இல்லை என்றாலும் நாள்தோறும் அவரை பற்றிய தகவல்கள் வந்துகொண்டு இருக்கிறது. அந்த வகையில், தான் நாயகியாக நடித்து முதல் தமிழ் படத்திற்கு வாங்கி சம்பளம் என்ன? அந்த படத்தில் நடித்த கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருக்கு சம்பளம் என்ன என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

1976-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான படம் மூன்று முடிச்சு. ஒ சீதா கதா என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்காக வெளியான இந்த படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி ரஜினிகாந்த் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக வசந்தகால நதிகளிலே பாடல் இன்றும் பலரின் பேவரெட் பாடலாக நிலைத்திருக்கிறது.

இந்த படத்தில் நடிக்கும்போது, கமல்ஹாசன் பெரிய நடிகராக உயர்ந்துவிட்டார். இதன் காரணமாக அவருக்கு ரூ20000 சம்பளம் வழங்கப்பட்டது. நான் அப்போது புதுமுகம் என்பதால், எனக்கு ரூ5000, ரஜினிகாந்துக்கு ரூ2000 சம்பளம் வழங்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்தில், ரஜினிகாந்த் என் அம்மாவிடம் கேட்டுக்கொண்டே இருப்பார் நான் எப்போது கமல்ஹாசன் மாதிரி பெரிய ஸ்டாராக வருவேன்? நான் அவரை போல் வர முடியுமா என்று கேட்பார். என் அம்மாவும் கண்டிப்பாக நீ பெரிய நடிகராக வருவாய் என்று சொல்வார்.

படப்பிடிப்பின்போது, சில சமயங்களில், அவர் காணாமல்போய்விடுவார். ஷாட் ரெடி அவர் எங்கே எங்கே என்று கேட்பார்கள். அப்போது கே.பாலச்சந்தர் சார், எங்காவது கண்ணாடி இருக்கானு பாரு அங்கதான் நின்னுட்டு இருப்பார் என்று சொல்வார் என்று நடிகை ஸ்ரீதேவி மனம் திறந்து பேசியுள்ளார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Sridevi tamil cinema actress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment