Advertisment

2 வருடத்தில் 3 முறை கருகலைப்பு... ஸ்ரீவித்யாவை காப்பாற்ற சொன்ன சிவாஜி : என்ன நடந்தது?

பல படங்களில், நாயகியாக நடித்திருந்த ஸ்ரீவித்யா, நடிகர் கமல்ஹாசனை காதலித்ததாகவும், இறுதியில் திருமணம் செய்துகொள்ள முடியாமல் போனதாகவும் தகவல் வெளியானது

author-image
WebDesk
New Update
Actress Srividya

நடிகை ஸ்ரீவித்யா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

1970-80-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான இருந்த ஸ்ரீவித்யா, ஒரு கட்டத்தில் திருமணமாகி கேரளாவில் செட்டில் ஆனபோது அவர் படும் இன்னல்களை பற்றி தெரிந்துகொண்ட நடிகர் சிவாஜி அவருக்கு நெருங்கிய இருவரிடம் சொல்ல, அவரை காப்பாற்றுமாறு கேட்டக்கொண்டுள்ளார்.

Advertisment

1967-ம் ஆண்டு தமிழில் வெளியான திருவருட்செல்வர் என்ற படத்தின் டான்சராக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ரீவித்யா, அடுத்து, மூன்றெழுத்து, நீலகிரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கேரக்டரிலும் டான்சராகவும் நடித்திருந்தார். 1973-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து பல படங்களில், நாயகியாக நடித்திருந்த ஸ்ரீவித்யா, நடிகர் கமல்ஹாசனை காதலித்ததாகவும், இறுதியில் திருமணம் செய்துகொள்ள முடியாமல் போனதாகவும் தகவல் வெளியான நிலையில், சமீபத்தில் வெளியாக கமல்ஹாசனின் நேர்காணல் குறித்த பழைய வீடியோ இணையத்தில் வெளியாகி இந்த தகவலை உறுதி செய்தது. மேலும் கடைசி காலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவித்யா கமல்ஹாசனை பார்க்க நினைத்து அவரும் சென்று பார்த்து வந்ததாகவும் தகவல் உள்ளது.

ஒரு கட்டத்தில் கமல்ஹாசன் வாணி கணபதியை திருமணம் செய்துகொண்ட நிலையில், அடுத்த சில வருடங்களில் ஸ்ரீவித்யா ஜார்ஜ் தாமஸ் என்பரை திருமணம் செய்துகொண்டு கேரளாவில் செட்டில் ஆனார். ஆனால் 1978-ல் நடந்த இந்த திருமணம் 1980-ல் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு தமிழ் மலையாளம் மொழிகளில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த ஸ்ரீவித்யா, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு மரணமடைந்தார்.

இந்நிலையில், இவருடன் நெருங்கி பழகிய வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் என்பவர் வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஸ்ரீவித்யா குறித்து பல நினைவுகளை பகிர்ந்துகொண்டார். ஸ்ரீவித்யா ஜார்ஜ் தாமஸை மனப்பூர்வமாக விரும்பி தான் திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர் ஸ்ரீவித்யாவை விரும்பவில்லை. அவரின் ஆடம்பரத்தை தான் விரும்பினார். ஸ்ரீவித்யாவை ஒரு போதை பொருளாக பயன்படுத்தி வந்துள்ளார்.

திருமணமாகி 3 முறை கர்ப்பமாக இருந்த ஸ்ரீவித்யாவை கர்ப்பத்தை கலைத்துவிடும்படி கூறியுள்ளார். போலித்தனமான அன்பை காட்டி கொடூரமாக நடந்துகொண்டுள்ளார். ஸ்ரீவித்யா போன்ற மென்மையானவரை அன்பாக பார்த்துக்கொள்ளாமல் பணத்தின் மீதே குறியாக இருந்துள்ளார். எங்கு சொத்து வாங்கலாம், ஸ்ரீவித்யா காசில் வாங்கி நம்ம பெயரில் எழுதிக்கொள்ளலாமா என்தே அவரின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. ஸ்ரீவித்யாவை திருமணம் செய்துகொண்டு தனது வாழ்வை மேம்படுத்திக்கொண்டார்.

ஸ்ரீவித்யா நினைத்த இல்லற வாழ்க்கை அவருக்கு கிடைக்கவில்லை. ஸ்ரீவித்யாவின் நிலையை பற்றி தெரிந்துகொண்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நல்ல நடிகைப்பா அவரை காப்பாத்துங்க என்று எங்களிடம் சொன்னார். அந்த பொண்ணு நல்ல பொண்ணுயா எதாவது பண்ணி காப்பாத்துங்கப்பா தேவையில்லாமல் போய் மாட்டிக்கிச்சு என்று சொன்னார். கேரளாவில் அமைதியான இடத்தில் செட்டில் ஆக வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அதற்குள் அவருக்கு நோய் வந்துவிட்டது. இறுதிவரை தனக்கு ஒரு குழந்தை இல்லையே என்று வருத்தப்பட்வர் தான் ஸ்ரீவித்யா என்று கூறியுள்ளார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Srividya Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment