Advertisment

மீண்டும் சின்னத்திரையில் சுகன்யா... புதிய சீரியல் எப்போது தொடங்கும்?

1991-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சுகன்யா.

author-image
WebDesk
New Update
Sukanya Actress

நடிகை சுகன்யா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவரும், ஆனந்தம் சீரியல் மூலம் 90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் புகழ்பெற்றவருமான சுகன்யா சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் சின்னத்திரையில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

1991-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சுகன்யா. இந்த படம் அவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்த நிலையில், அடுத்து ஆனந்த்பாபுவுடன் இணைந்து எம்.ஜி.ஆர் நகரில் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் ஓரளவு வரவேற்பை பெற்றது.

1992-ம் ஆண்டு வெளியான சின்னக்கவுண்டர் படம் சுகன்யாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது. இந்த படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகைகான விருதையும் பெற்றிருந்தார். தொடர்ந்து, கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

1997-ல் வெளியான தம்பிதுரை படமே இவர் ஹீரோயினாக நடித்த கடைசி படமாகும். அதன்பிறகு முக்கிய கேரக்டரில் நடிக்க தொடங்கிய சுகான்யா, கடைசியாக சேரன் இயக்கத்தில் வெளியான திருமணம் என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள சுகன்யா, கண்ணத்தில் முத்தமிட்டால் படத்தில் நடிகை நந்திதா தாஸ்க்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.

பட வாய்ப்பு குறைந்ததை தொடர்ந்து சின்னத்திரையில் என்டரி ஆன சுகான்யா, 1996-ம் ஆண்டு வெளியான ஜட்ஜ்மெண்ட் என்ற டிவி படத்தை இயக்கிய சுகன்யா, 2003-ம் ஆண்டு ஆனந்தம் என்ற சீரியிலல் நடித்து புகழ் பெற்றார். 6 வருடங்கள் ஒளிபரப்பான இந்த சீரியல் 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதன்பிறகு தமிழ் மற்றும் மலையாளத்தில் சில டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சுகன்யா 2019-ம் ஆண்டுக்கு பின் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை.

இதனிடையே 4 ஆண்டு இடைவெளிக்கு பின் சுகன்யா மீண்டும் சின்னத்திரையில் என்டரி ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனந்தம் சீரியல் மூலம் சின்னத்திரையில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி வைத்திருந்த சுகன்யாவின் ரீ-என்டரி தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sukanya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment