/indian-express-tamil/media/media_files/2025/08/20/msv-daughter-in-law-2025-08-20-22-19-48.jpg)
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் பாக்யராஜ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான நாயகியாக அறிமுகமான நடிகை எம்.எஸ்.வி வீட்டு மருமகள் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில், பல இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக இருந்து எம்.ஜி.ஆர் நடித்த ஜெனோவா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் எம்.எஸ்.விஸ்வநாதன். முதல் படமே இவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அடுத்தடுத்து எம்.ஜி.ஆர், சிவாஜி, உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தொடங்கி அறிமுக நடிகர்கள் வரை பலரின் படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
அதேபோல் கவியரசர் கண்ணதாசனுடன் நெருங்கிய நட்பில் இருந்த எம்.எஸ்.விஸ்வநாதன், பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து கொடுத்த பாடல்கள் காலம் கடந்து இன்றும் நிலைத்திருக்கிறது. திரையுலகில் இசையமைப்பாளராக கொடிகட்டி பறந்த எம்.எஸ்.வி, தனது 7 பிள்ளைகளில் ஒருவரை கூட திரைத்துறை தொடர்பான எந்த வேலைகளிலும் கொண்டுவரவில்லை.இன்னும் எம்.எஸ்.விஸ்வநாதன் பிள்ளைகள் யார் யார் என்பது குறித்து மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லாத நிலை தான் இருக்கிறது.
அதே சமயம் எம்.எஸ்.வியின் மருமகள்களில் ஒருவர் பிரபல நடிகை என்பது பலரும் அறிந்திடாத ஒரு தகவல். எம்.எஸ்.விஸ்வநாதனின் மூத்த மகன் கோபி கிருஷ்ணாவின் மனைவி சுலோக்ஷனா. தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில், பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான தூரல் நின்னு போச்சு என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். தமிழ் தெலுங்கு மலையாளம், கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழகளில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள சுலோக்சனா, தற்போது முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
மேலும் புன்னகை மன்னன் படத்தில் ரேவதிக்கும், மைதிலி என்னை காதலி படத்தில் அமலாவுக்கும் டப்பிங் கலைஞராக குரல் கொடுத்துள்ளார். எம்.எஸ்.வி மகன் கோபி கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சுலோக்சனாவுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களின் காதலை இரு குடும்பத்தாரும் ஏற்றுக்கொள்ளாத நிலையில், வீட்டை மீறி திருமணம் செய்துள்ளனர். திருமணம் முடிந்து சில மாதங்களில் இரு குடும்பத்தாரும் இவர்களை ஏற்றுக்கொண்டனர். 3 குழந்தைகள் பிறந்த பிறகு கோபி கிருஷ்ணனா - சுலோக்சனா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். தற்போது சுலோக்சனா தனது 3 பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
மேலும் 16 வயதில் ஹீரோயின் ஆன சுலோக்ஷனாவுக்கு 17 வயதில் கல்யாண ஆசை வந்து திருமணம் செய்துகொண்தாகவும் கூறியுள்ளார். எம்.எஸ்.வி மகன் கோபிகிருஷ்ணா இயக்கத்தில் நடித்தபோது அவர் தனக்கு ப்ரபோஸ் செய்ததாகவும், முதல் ப்ரபோஸ் த்ரிலிங்காக இருந்துது என்றம் சுலோக்ஷனா கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு. இந்தி, கன்னடம் மலையாளம், உள்ளிட்ட மொழிகில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள சுலோக்ஷனா, தமிழ், மலையாளம் இந்தி உள்ளி்ட்ட மொழிகளில் பல சீரியல்களிலும் நடித்து அசத்தியுள்ளார். ரஜினியுடன் தம்பிக்கு எந்த ஊரு, கமல்ஹாசனுடன் தூங்காதே தம்பி தூங்காதே ஆகிய படங்களில் சுலோக்ஷனா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.