கோவிலுக்கு புர்கா அணிந்து சென்ற நடிகை... சர்ச்சை வீடியோவுக்கு கூலாக பதில் கொடுத்த சுவாதி

சசிகுமாருடன் இணைந்து போராளி, விஜய் சேதுபதியுடன் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜெய்யுடன் வடகறி, யாக்கை, உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.

சசிகுமாருடன் இணைந்து போராளி, விஜய் சேதுபதியுடன் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜெய்யுடன் வடகறி, யாக்கை, உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Swathi Reddy

சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த நடிகை சுவாதி

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சுவாதி கோவிலுக்குள் புர்கா அணிந்து சென்றது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் கேட்ட கேள்விக்கு பதிலும் அளித்துள்ளார்.

Advertisment

கடந்த 2005-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான டேஞ்சர் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான நடிகை சுவாதி, தொடர்ந்து 2008-ம் தமிழ் சினிமாவில் க்ளாசிக் படமாக சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். சசிகுமார் இயக்கி நடித்திருந்த இந்த படத்தில் நாயகன் ஜெய்க்கு ஜோடியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சுவாதி.

தொடர்ந்து சசிகுமாருடன் இணைந்து போராளி, விஜய் சேதுபதியுடன் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜெய்யுடன் வடகறி, யாக்கை, உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். கடைசியாக தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரி படத்தில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ள சுவாதி மன்த் ஆஃப் மது இடியட் உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த 2018-ம் ஆண்டு விகாஸ் விசு என்ற பைலட்தை திருமணம் செய்துகொண்ட சுவாதி,2019-ம் ஆண்டு வெளியான திரிசூர் பூரம் என்ற மலையாள படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சுவாதி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார், அந்த வகையில் சமீபத்தில் கோவிலுக்கு செல்வதற்காக ரயிலில் பயணம் செய்த சுவாதி புர்கா அணிந்து வந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.

Advertisment
Advertisements

இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கோவிலுக்கு மாஸ்க் அணிந்து செல்லலாமே புர்கா எதற்காக என்று கேள்விகளை எழுப்பி விமர்சித்து வரும் நிலையில், இதற்கு பதில் அளித்துள்ள சுவாதி, தான் வெளியில் செல்லும்போது புர்கா அணிந்துதான் செல்வேன், அப்போது தான் என்னால் மக்களோடு மக்களாக பயணிக்க முடிகிறது. நினைக்கும் இடத்தில் லெமன் சோடா குடிக்க முடிகிறது என கூலாக பதிலளித்து உள்ளார். இந்த பதில் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Swathi Reddy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: