New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/08/Tamannah-Video.jpg)
தமன்னா
இரு படங்களில் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கும் தமன்னா சமீபத்தில் கேரளா மாநிலம் கொல்லத்தில் நடைபெற்ற கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.
தமன்னா
கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சென்ற நடிகை தமன்னாவை பார்த்த ரசிகர் அவரது கையை பிடித்து எழுத்ததும் அவரை பவுன்சர்கள் ஆலேக்காக தூக்கி வீசியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா லஸ்ட் ஸ்டோரீஸ் 2 படத்திற்கு பிறகு ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
சுதந்திர தின விடுமுறையை குறி வைத்து வரும் ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியாக உள்ள ஜெயிலர் படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜெயலர் படத்தின் மூலம் தமன்னா முதல் முறையாக நடிகர் ரஜினிகாந்த் படத்தில் நடித்துள்ளார். அதேபோல் தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக போலா சங்கர் என்ற படத்திலும் நடித்துள்ளார் தமன்னா. இந்த படம் ஆகஸ்ட் 11-ந் தேதி வெளியாக உள்ளது.
இந்த இரு படங்களில் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கும் தமன்னா சமீபத்தில் கேரளா மாநிலம் கொல்லத்தில் நடைபெற்ற கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சிக்காக தனது பவுன்சர்களுடன் வந்த தமன்னாவை பார்த்த ரசிகர் ஒருவர் திடீரென பாதுகாப்பாளர்களை மீறி தமன்னாவிடம் பாய்ந்து தமன்னாவின் கையை பிடித்துள்ளார்.
ஆர்வக்கோளாறில் வந்த ரசிகர்களை பார்த்த பவுன்சர்கள் அவரை அலேக்காகா தூக்கிய நிலையில், தமன்னா அவர்களை சமாதானப்படுத்தி அந்த ரசிகரை அமைதிப்படுத்தி அவருடன் சிரித்த முகத்தோடு செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளார். பவுன்சர்கள் அவரை வெளியேற்ற நினைத்தாலும் தமன்னா அந்த ரசிகருக்கு செல்பி போஸ் கொடுத்தது பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.