/indian-express-tamil/media/media_files/2025/08/11/tamannash-andh-2025-08-11-17-06-11.jpg)
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகை தமன்னா, இந்தியில் வெளியான ராஹினி எம்.எம.எஸ் மறறும் ராஹினி எம்.எம்.எஸ் 2 ஆகிய படங்களின் தொடர்ச்சியாக தாயராக உள்ள 3-வது பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு, நடிகை தமன்னா பாட்டியாவின் சினிமா பயணம் புதிய வேகத்தைப் பெற்றுள்ளது. 'லஸ்ட் ஸ்டோரீஸ் 2' போன்ற வெப் தொடர்களில் அவர் நடித்த காட்சிகள், அவரை சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்திற்குள்ளாக்கின. அதனைத் தொடர்ந்து, சமீபத்தில் வெளியான 'ஸ்டிரீ 2' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஆஜ் கி ராத்' பாடல் அவருக்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இந்த வெற்றிக்குப் பிறகு, தமன்னா சித்தாத் மல்ஹோத்ராவுடன் 'வன்' மற்றும் ஜான் ஆபிரஹாம் நடிக்கும் ரோஹித் ஷெட்டியின் அடுத்த படத்திலும் ஒப்பந்தமாகி, தனது மார்க்கெட்டை வலுப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், தமன்னாவின் அடுத்த பிரம்மாண்டமான திட்டம் பற்றிய செய்திதான் இப்போது பாலிவுட்டில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. இந்தியில் வெளியான ராஹினி எம்.எம்.எஸ் படத்தின் 3-வது பாகத்தைஉருவாக்குவதில் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தீவிரமாக இறங்கியுள்ளர். இதற்காக பல கதைகளை ஆராய்ந்த பிறகு, ஒரு சிறந்த கதைக்களத்தை தேர்ந்தெடுத்துள்ளார். இந்த கதையானது, ராஹினி எம்.எம்.எஸ் உலகின் தன்மையுடன் ஒத்துப்போவது மட்டுமின்றி, ஒரு புதிய வகைக்குள் நுழைந்து, முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட அனுபவத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பிங்க்வில்லா தளததில் வெளியாகியள்ள தகவலின்படி, ஏக்தா கபூர் 'வன்' படப்பிடிப்பின் போது தமன்னாவிடம் ராஹினி எம்.எம்.எஸ் படத்தின் கதையைப் பற்றி பேசியுள்ளார். இதை கேட்ட தமன்னா, கதையின் ஹாரர் தன்மையால் மிகவும் ஈர்க்கப்பட்டதாக கூறப்படகிறது. மேலும் இந்தப்படத்தில் முந்தைய பாகங்களைப் போலவே ஒரு பெரிய ஹிட் பாடலுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும், 'பேபி டால்' பாடலின் வெற்றியைப் போலவே ஒரு பாடலை உருவாக்க படக்குழுவினர் முயன்று வருவதாகவும் தெரிகிறது.
ராஹினி எம்.எம்.எஸ் தொடரின் முதல் பாகம் 2011-ம் ஆண்டு வெளியானது. இதில், ராஜ்குமார் ராவ் மற்றும் கைனாஸ் மோதிவாலா நடித்திருந்தனர். தொடர்ந்து 2014-ல் வெளியான ராஹினி எம்.எம்.எஸ் 2 திரைப்படம் சன்னி லியோன் நடித்ததுடன், 'பேபி டால்' பாடல் மூலம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த இரண்டு படங்களும் ஹாரர்-சிற்றின்ப வகையைச் சேர்ந்தவை. ஆனால், ராஹினி எம்.எம்.எஸ் 3 படத்தின் மூலம், ஏக்தா கபூர் இந்தத் தொடரை ஹாரர்-காமெடி பாணியில் மீண்டும் கொண்டுவர திட்டமிட்டுள்ளார்.
இதன் மூலம் முந்தைய படங்களின் ஹாரர் மற்றும் கவர்ச்சி கலவையை விட்டுவிட்டு, புதிய பார்வையாளர்களை ஈர்க்க முயன்று வருகிறார். இந்த படம் 2025-ஆம் ஆண்டின் இறுதியில் படப்பிடிப்புக்குச் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.