/indian-express-tamil/media/media_files/2025/08/23/screenshot-2025-08-23-210251-2025-08-23-21-03-06.jpg)
விஜயகுமாரின் மகளான வனிதா கோலிவுட்டில் சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர். விஜய்யுடன் சந்திரலேகா படத்திலும் நடித்தார். அதன் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் பிக்பாஸில் கலந்துகொண்டார். பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் பிரபலம் ஆகிவிடலாம் என்ற விதியின்படி வனிதாவும் தமிழ்நாடு முழுக்க மேலும் ஃபேமஸ் ஆனார்.
பிக்பாஸ் டைட்டிலை அவர் வெல்லாவிட்டாலும் போட்டியிலிருந்து வெளியேறிய பிறகு படவாய்ப்புகள் குவிந்துவருகின்றன. இதுவரை 17 படங்களில் நடித்திருப்பதாக கூறுகிறார் வனிதா.
பிக்பாஸுக்கு சென்று வந்த பிறகு அவர் வசந்தபாலனின் 'அநீதி' படத்தில் நடித்தார். அந்தப் படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. மேலும் அவரது நடிப்பில் சில படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன. இதற்கிடையே அவரது மகள் ஜோவிகாவும் திரைத்துறையில் தனக்கான இடத்தை பிடிப்பதற்கு கடுமையாக உழைத்துவருகிறார்.
வனிதாவின் மகள் ஜோவிகாவும் பிக்பாஸில் கலந்துகொண்டார். ஆனால் டைட்டில் வெல்ல முடியவில்லை. அதையடுத்து அவர் வனிதாவை வைத்து ஒரு படம் தயாரிக்க முடிவெடுத்தார். அது தான். 'மிஸ்ஸ்ஸ் அண்ட் மிஸ்டர்'. இந்த படத்தை வனிதாவே இயக்கி நடித்திருக்கிறார்.
டிகை வனிதா விஜயகுமார் இயக்கிய மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் தியேட்டரில் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில், வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டர்,ஷகிலா, செஃப் தாமு, பாத்திமா பாபு, கிரண், ஸ்ரீமான், ஆர்த்தி, கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் போஸ்ட்டரை வெளியிடவும், ஆசீர்வாதம் வாங்குவதற்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டிற்கு சென்றிருந்தார். அந்த புகைப்படங்கள் அப்ப்டோது வைரலாகி இருந்தது.
அதை பற்றி ஒரு நேரலையில் பேசுகையில், "நான் முதலில் லதா ஆண்ட்டியிடம் தான் பேசினேன். அவர் தான் என்னை வீட்டுக்கு வா என்று கூறினார்கள். அங்கு சென்ற பொது ரஜினி அங்கிள் 'ஜெயிலர் 2' படத்தின் ஷூட்டிங்கில் இருந்தார்.
லதா ஆண்ட்டி தான் என்னிடமும் ஜோவிகாவிடவும் நிறைய பெர்சனல் விஷயங்களை கூட பேசினார்கள். படத்தை பற்றியும் விசாரித்தார். ரஜினி அங்கிளை பார்க்க வேண்டும் என்று நான் தான் கேட்டேன்.
ஏன் என்றால், படத்தை பற்றியும் கூற வேண்டும், அதே நேரத்தில் ஜோவிகாவிற்கு அவருடைய சீர்வாதமும் வேகும் என்பதனால். லதா ஆண்ட்டி என்னை அடுத்த நாள் வீட்டிற்கு வர சொன்னார். அப்போது நான் சென்ற போது எப்போதும் போல பாசத்துடன் என்னை வரவேற்றார்கள்.
எனக்கு அது வேறு வீடு போல தோன்றவே இல்லை. ஜோவிகாவை வளர்ந்த பிறகு இப்போது தான் பார்த்தார் அங்கிள். அவளை பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டார்." என்று நெகிழ்ச்சியுடன் பேசினார் வனிதா.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.