Advertisment

'நேரில் வந்து பேச தைரியம் இருக்கிறதா?' ட்ரோல் ஆசாமிகளுக்கு வரலட்சுமி சரத்குமார் பதிலடி

உங்களை நாங்கள் ஃபாலா செய்ய சொல்லவில்லை. அதேபோல் நீங்களே ஃபாலோ செய்துவிட்டு நாங்கள் பதிவிடும் பதிவுகளுக்கு எதிராக கருத்து சொல்கிறீர்கள்.

author-image
WebDesk
New Update
Varalakshmi Sarath

வரலட்சுமி சரத்குமார்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சமீபத்தில் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு ரசிகர்கள் பலரும் விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்த நிலையில், இதற்கு பதிலடியாக வரலட்சுமி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisment

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நான் ஒன்றை மட்டும் கேட்க விரும்புகிறேன். உங்கள் அம்மா, தங்கை அல்லது குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணை பற்ற இப்படி பேசுவீர்களா? உங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் தயவு செய்துவிட்விடுங்கள். அவர்களை அன்ஃபாலோ செய்துவிட்டு, போய்விட வேண்டியது தானே? அவர்களை ஃபாலோ செய்து, கமெண்ட் அடித்து எதற்காக கஷ்டப்பட வேண்டும்?

உங்களை நாங்கள் ஃபாலா செய்ய சொல்லவில்லை. அதேபோல் நீங்களே ஃபாலோ செய்துவிட்டு நாங்கள் பதிவிடும் பதிவுகளுக்கு எதிராக கருத்து சொல்கிறீர்கள். பிடித்திருந்தால் லைக் போடுங்கள். இல்லை என்றால் விட்டுவிடுங்கள். அது உங்கள் விருப்பம். அதேபோல் கண்டமேனிக்கு கமெண்ட் போடுகிறவர்கள் முகம் தெரியாத ஆளாக இருக்கிறார்கள். அப்படி முகம் தெரியாத ஆட்கள் கருத்து சொல்ல என்ன தைரியம் இருக்கிறது?

உண்மையிலேயே உங்க காமெண்ட் அடிக்க தோன்றுகிறது என்றால் நேராக வந்து சொல்லுங்கள். நேராக பேச தைரியம் இல்லாதவர்கள் என்னை பொறுத்தவரையில் ஒரு கோழைத்தான். கோழையிடம் பேச எனக்கு விருப்பம் இல்லை என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் இவருக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Varalakshmi Sarathkumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment