/indian-express-tamil/media/media_files/ljKuV1xoiyZzbcBS2NKG.jpg)
சீமான் - விஜயலட்சுமி
இது தான் எனது கடைசி வீடியோ என் மரணம் சீமான் யார் என்பதை புரிய வைக்கும் என்று கூறி நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள புதிய வீடியோ பதிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகார் அளித்திருந்தார். ஒரு கட்டத்தில் இந்த புகாரை வாபஸ் பெற்ற அவர், கர்நாடகாவுக்கு திரும்பிவிட்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் மீண்டும் சீமான் மீது புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் காரணமாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த புகார் தொடர்பாக சீமானுக்கு காவல்துறை சார்பில் 2 முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து அடுத்த இரு தினங்களில், நள்ளிரவில் நடிகை விஜயலட்சுமி சீமான் மீதான தனது புகாரை வாபஸ் பெற்றிருந்தார்.
மேலும் தோல்வியை ஒப்புக்கொண்டு தான் இந்த புகாரை வாபஸ் பெற்றதாகவும், தான் மீண்டும் பெங்களூருவுக்கே திரும்ப சென்று விடுவதாகவும் நடிகை விஜயலட்சுமி கூறியிருந்தார். சொன்னபடி பெங்களூர் திரும்பிய அவர் அடுத்த நாளே புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியளித்தார். இதுதான் எனது கடைசி வீடியோ நான் சாகப்போகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
அடுத்த சில மாதங்கள் எந்த வீடியோவும் வெளியிடாமல் இருந்த நடிகை விஜயலட்சுமி, தற்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது வெளியிட்டுள்ள வீடியோபதிவில், கடந்த 2008-ம் ஆண்டு எனது அக்காவின் பிரச்சனைக்காக நான் சீமானை சந்தித்தேன். அப்போது அவருக்கு திருமணம் ஆகாத நிலையில், என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி 3 ஆண்டுகள் என்னுடன் குடும்பம் நடத்தினார். இதில் என்னை ரகசியமாக திருமணம் செய்துகொண்ட அவர் ஒரு கட்டத்தில் என்னை விட்டு விட்டு சென்றுவிட்டார்.
கடந்த ஆண்டு நான் அவரின் புருஷன், நான் அவரை காப்பாற்றுகிறேன் மாதம் ரூ50000 கொடுக்கிறேன் என்று மதுரை செல்வத்தை வைத்து டீல் பேசினார். இப்போது நாடகம் போடுகிறார். கர்நாடகாவில் என்னால் வாழ முடியவில்லை என்று சொல்லும்போது, பரவாயில்லை சாகட்டும் விடு என்று சொல்கிறார். இப்போது அதுதான் நடக்க போகிறது. தமிழ்நாட்டுக்கு இதுதான் எனது கடைசி வீடியோ. 2 நாட்களுக்கு பிறகு நான் எப்படி இறந்தேன் என்று கர்நாடகாவில் இருந்து தெரியப்படுத்துவார்கள்.
உன் உயிரை நான் முடித்துக்கொண்ட பிறகு கர்நாடகாவில் இருந்து சீமானுக்கு தகவல் வரும். என் மரணத்திற்கு அவர் அங்கு வந்து பதில் சொல்லட்டும். என் மரணம் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியின் உண்மையான முகத்தை புரிய வைக்கும். அதன்பிறகு இந்த மாதிரி ஆள் வேண்டுமா வேண்டாமா என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் என்று நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.